ஒரே மோட்டாரில் தீவனங்கள் வெட்ட மற்றும் அரைக்க பயன்படும் இயந்திரம்.

திரு ரிஷி அவர்கள், ஒரே மோட்டாரில் ஆடு மாடுகளுக்கு தேவையான தீவனங்களை அரைப்பதற்கு வெட்டுவதற்கும் பயன்படும் இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். அந்த இயந்திரத்தை பற்றியும் அதனுடைய பயன்களைப் பற்றியும், அந்த இயந்திரத்தின் சிறப்புகளைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

இயந்திரத்தை தேர்ந்தெடுக்கும் முறை

பொதுவாக அனைத்து விவசாயிகளும் தீவனங்களை வெட்டுவதற்கோ,அரைப்பதற்கோ பயன்படும் இயந்திரத்தை தேர்ந்தெடுக்கும் போது ஒரு நான்கு காரணங்கள் மிக முக்கியமான ஒன்று என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

முதலாவதாக அந்த நிறுவனத்தில் இயந்திரங்களுக்கான சோதனை அறிக்கை மற்றும் அரசு சான்றிதழ் உள்ளதா என்பதை அறிய வேண்டும் எனவும், இரண்டாவதாக அந்த நிறுவனத்தின் இயந்திரத்தில் உள்ள மோட்டார் காப்பர் பிணைப்பா அல்லது அலுமினிய பிணைப்பா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மூன்றாவதாக பல நிறுவனங்களில் இயந்திரங்களின் விலையை குறைப்பதற்கு இயந்திரத்தின் எடையையும் அதனுடைய தரத்தை குறைத்து விடுகின்றன எனவும், எனவே இயந்திரத்தின் எடையையும், தரத்தையும் சரியாக பார்த்து வாங்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

நான்காவதாக இயந்திரங்களுக்கு பயன்படும் வெட்டும் பிளேடுகளின் அளவுகள் இயந்திரங்களுக்கு சரியாக பொருந்துகிறதா என பார்த்து வாங்க வேண்டும் எனவும் கூறுகிறார். அனைத்து நிறுவனங்களிடமும் எந்த வகையிலும் மறந்து போகாமல் இந்த நான்கு முறைகளையும் கேட்டு வாங்க வேண்டும் வேணும் திரு ரிஷி  அவர்கள் கூறுகிறார்.

திரு ரிஷி அவர்களின் தரமான தயாரிப்பு

திரு ஹரி அவர்களின் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களுக்கு அரசு சான்றிதழ் சோதனை அறிக்கை உள்ளது எனவும் கூறுகிறார். இந்த சோதனை அறிக்கை சான்றிதழை அனைத்து நிறுவனங்களும் வாங்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

நாம் தரமான பொருளை தயாரிக்கிறோம் என்பதற்கு இந்த சோதனை அறிக்கை சான்றிதழ் உதாரணம் ஆகும் எனவும், பொதுவாக தங்கங்களுக்கு எவ்வாறு தரநிலை உள்ளதோ அதைப் போலவே நாம் தயாரிக்கும் இயந்திரங்களுக்கு இந்திய தரநிலை என்று ஒன்று உள்ளது அதையே பின்பற்ற வேண்டும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இந்த அரசு சான்றிதழை இயந்திரங்களுக்கு அரசு அளிப்பதற்கு முன் இயந்திரங்களின் தரத்தையும், அவற்றின் செயல் திறனையும், இயந்திரங்கள் எவ்வளவு வேகமாக தீவனங்களை வெட்டுகிறது என்பதையும் சோதனை செய்த பிறகே இந்த தீவனம் அரைக்கும் இயந்திரத்திற்கு சோதனை அறிக்கை இந்திய சான்றிதழை அரசானது வழங்கும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

திரு ரிஷி அவர்களிடம் உள்ள அனைத்து தீவனம் அரைக்கும் இயந்திரங்களுக்கும் சோதனை அறிக்கை சான்றிதழ் வைத்திருப்பதாகவும், இந்த சோதனை அறிக்கை சான்றிதழை வைத்திருப்பது மிகுந்த அவசியமான ஒன்று எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் மோட்டார்கள் காப்பர் பிணைப்பா அல்லது அலுமினிய பிணைப்பா என்பதை பார்த்து வாங்குவது மிக முக்கியமான ஒன்று எனவும், ஏனெனில் சில நிறுவனங்களில் பொருள்களின் விலையை குறைப்பதற்கு அலுமினிய பிணைப்பை போட்டு விடுவதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். மேலும் மோட்டார் களுக்கு உத்தரவாதம் உள்ளதா என்பதையும் கேட்டு அறிந்த பிறகு இயந்திரங்களை வாங்குவது சிறப்பானது எனவும் கூறுகிறார்.

திரு ரிஷி அவர்களின் இயந்திரங்களுக்கு ஒரு வருட உத்தரவாதம் உள்ளது எனவும் கூறுகிறார். அலுமினிய பிணப்பு உள்ள மோட்டார்களை பயன்படுத்தும் போது அவைகள் விரைவில் சூடாகி விடும் எனவும் அதனுடைய ஆயுட்காலமும் குறைந்த அளவே இருக்கும் எனவும் இதன் காரணமாகவே இந்த அலுமினிய பிணைப்பு உள்ள மோட்டார்களை பயன்படுத்து நமக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும் எனவும் கூறுகிறார். ஆனால் காப்பர் பிணைப்பு உள்ள மோட்டார் வகைகள் இவ்வாறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இதனால் காப்பர் பிணைப்பு உள்ள மோட்டார்களை பயன்படுத்துவது மிக சிறந்தது எனவும் கூறுகிறார்.

மேலும் ஒரு விவசாயி தீவனங்கள் அரைக்கும் இயந்திரங்களை வாங்கும்போது அதனுடைய ஆயுட்காலம் அதிக அளவு இருப்பது மிக முக்கியமான ஒன்றாகும் எனவும் பல நிறுவனங்களில் இயந்திரங்களின் எடையை குறைத்து அதன் பொருள்களையும் குறைத்து குறைந்த அளவிற்கு விற்பனை செய்கின்றன இதனால் அந்த இயந்திரத்தின் ஆயுட்காலம் குறைந்த காலமே எனவும் இதனால் இயந்திரத்தின் எடை மற்றும் தரம் சரியாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும் எனவும், திரு ரிஷி அவர்களின் இயந்திரங்களின் நிறுவனத்தில் இவ்வாறு எடை குறைவான இயந்திரங்களை ஒருபோதும் விற்பது இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் திரு ரிஷி அவர்களின் தீவனம் அரைக்க பயன்படும் அனைத்து இயந்திரங்களும் அதிக எடையையும், தரத்தையும் பெற்றிருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இயந்திரங்களுக்கு வெட்ட பயன்படும் பிளேடுகளின் அளவு ஆடு மாடுகள் உணவுகளை உண்ணும் அளவை தெரிந்த பிறகு பிளேடுகளை அளிக்க வேண்டும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். பல நிறுவனங்களில் இரண்டு பிளேட் அளவுகளை மட்டுமே விற்பனை செய்து வருகின்றன இதற்கு காரணம் குறைந்த அளவில் இயந்திரத்தை விற்கும் நோக்கம் மட்டுமே என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

திரு ரிஷி அவர்களின் நிறுவனத்தில் உள்ள அனைத்து இயந்திரங்களையும் அடிக்கடி புதுப்பித்துக் கொண்டே இருப்பதாகவும் வாடிக்கையாளர்களின் எண்ணங்களையும் சரிவர பூர்த்தி செய்து வருவதாகவும் திரு ரிஷி  அவர்கள் கூறுகிறார். எந்த ஒரு இயந்திரங்களை எடுத்துக்கொண்டாலும் அவைகளை உடனடியாக புதுப்பித்துக் கொண்டே வருவதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

ஒரே மோட்டாரில் தீவனங்கள் அரைக்கவும் வெட்டவும் பயன்படும் இயந்திரம்

திரு ரிஷி அவர்களின் தீவனங்களை வெட்டுவதற்கும் அரைப்பதற்கு பயன்படும் இயந்திரங்கள் ஒரே மோட்டாரில் இரண்டு வேலையை செய்யுமாறு உருவாக்கியுள்ளார். இதன் காரணம் விவசாயிகளுக்கு நல்லதை செய்வதே எனவும் கூறுகிறார்.

பொதுவாக இவர்களுக்கு தீவனங்களை வெட்டுவதற்கு தனியாக ஒரு இயந்திரமும், அரைப்பதற்கு தனியாக ஒரு இயந்திரமும் விற்றால் அதிக லாபம் வரும் எனவும் கூறுகிறார்.

ஆனால் அந்த முறையில் இயந்திரங்களை விற்றால் விவசாயிகளுக்கு அதிகளவு செலவு செய்யும் நிலைமை வரும் எனவும் அந்த காரணத்தால் மட்டுமே ஒரே மோட்டாரில் தீவனங்களை அரைப்பதற்கு தீவனங்களை வெட்டுவதற்கும் பயன்படும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

திரு ரிஷி அவர்கள் மிகுந்த நல்ல எண்ணம் உடையவர் ஆவார். இதன் காரணமாகவே விவசாயிகளுக்கு உதவும் எண்ணத்தை கொண்டிருக்கிறார்.

திரு ரிஷி அவர்களின் நிறுவனத்தில் உள்ள தீவனங்கள் அரைக்க மற்றும் வெட்ட பயன்படும் இயந்திரங்களில் ஒரே நேரங்களில் தீவனங்களை வெட்டவும் அரைக்கவும் முடியும் எனவும் இந்த முறையின் மூலம் செலவு குறையும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். இவருடைய இந்த தொழில்நுட்பம் மிக சிறப்பான வகையில் உள்ளது.

திரு ரிஷி அவர்கள் அவர்களின் நிறுவனத்தில் எந்த வகையான இயந்திரங்களை உருவாக்கினாலும் அது ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடிய இயந்திரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை இவரும்,  இவருடைய குழுவும் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.

பல்நோக்கு இயந்திரங்கள்

இவர்களுடைய நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட தூரிகை வெட்டி இயந்திரமும் பல்நோக்கு எண்ணத்துடன் உருவாக்கியதாகவும், இது ஒரே நேரத்தில் நான்கு வேலைகளை செய்யும் எனவும், இந்த இயந்திரங்கள் ஆனது விவசாயிகளிடம் அதிக வரவேற்ப்பை பெற்றது எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர்களுடைய நிறுவனத்தில் பவர் வீடர் என்ற இயந்திரத்தையும் பல்நோக்கு எண்ணத்துடன் உருவாக்கியதாகவும், இந்த இயந்திரமானது ஒரே நேரத்தில் ஐந்து வேலைகளை செய்யும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இந்த வகையிலேயே பெரிய அளவில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கிடைமட்ட தீவனங்கள் வெட்டவும் அரைக்கவும் பயன்படும் இயந்திரத்தையும், சாதாரண தீவனங்கள் வெட்டவும் அரைக்கவும் பயன்படும் இயந்திரங்களை உருவாக்கி உள்ளதாகவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

சாதாரண தீவனம் அரைக்கும் மற்றும் வெட்டும் இயந்திரம்

திரு ரிஷி அவர்களின் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 1.5 சதுர அடியிலும்,2 Hp சதுர அடியிலும் இயந்திரம் இருந்தது எனவும், இப்பொழுது அந்த இயந்திரம் இரண்டு வேலைகளை செய்யும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளதால் 2 Hp சதுர அடியில் மோட்டார் இருப்பது மிக சிறந்தது எனவும் , இதில் ஒரு மோட்டாரிலிருந்து இரண்டு வகையான வேலைகளை செய்து கொள்ளலாம் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இந்த இயந்திரத்தில் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அரைக்கும் போது அவைகள் கோழி, ஆடு, மாடு போன்ற விலங்குகள் உண்பதற்கு சரியாக இருக்கும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

வாடிக்கையாளர்கள் தீவனங்கள் அரைக்க மற்றும் வெட்ட பயன்படும் இயந்திரங்களை விட, இரண்டு வேலைகளும் ஒன்றாக நடைபெறும் இந்த இயந்திரத்தை வாங்குவதன் மூலம் அவர்களுக்கு முப்பத்து 5 லிருந்து 40 சதவீதம் அளவு செலவை மிச்சம் செய்யலாம் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இந்த இயந்திரங்களுக்கு ஒரு வருடம் உத்திரவாதம் தருவதாகவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

அதிவேக கிடைமட்ட தீவனங்கள் அரைக்க மற்றும் வெட்ட பயன்படும் இயந்திரம்

இந்த இயந்திரமானது சாதாரண இயந்திரத்தை விட அதிக வேகமாக செயல்படும் இயந்திரம் எனவும், இந்த இயந்திரத்தில் தீவனங்களை அரைக்கவோ அல்லது வெட்டவோ செய்தால் சாதாரண இயந்திரத்தில் அரைப்பதை விட இந்த அதிவேக இயந்திரத்தில் வேகமாகவும் அதிக அளவு உணவுகளையும் அளிப்பதாகவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இந்த இயந்திரத்தில் அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களை அரைப்பதால் அவைகள் மிகவும் மெலிசாக அரையும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். மேலும் இந்த இயந்திரத்தில் தானியங்களை ஒரு மணி நேரத்திற்கு ஐம்பது கிலோ வரை அரைக்க முடியும் எனவும் கூறுகிறார்.

இந்த இயந்திரத்தில் மக்காச்சோளம் போன்ற அனைத்து தானியங்களையும் அரைக்க முடியும் எனவும் கூறுகிறார். இது மிகவும் எளிதான பராமரிப்பு முறை எனவும் கூறுகிறார்.

இவரிடம் உள்ள இந்த இரண்டு இயந்திரங்களும் ஒரே விலையை பெற்றிருக்கும் எனவும் வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்து இயந்திரங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

திரு ரிஷி அவர்களின் சிறப்பான தொழில்நுட்ப இயந்திரம்

திரு ரிஷி அவர்களின் நிறுவனத்தில் இது போன்ற பல்வேறு இயந்திரங்கள் பலவகையில் பயன்படக்கூடிய வகையில் உள்ளது. அதிலும் இந்த இயந்திரங்கள் விலை குறைவாகவும் அதிக தரத்தையும் பெற்றிருக்கிறது.

இவரிடம் உள்ள அனைத்து இயந்திரங்களும் மிக சிறப்பான, தரமான வகையில் உள்ளது.

மேலும் படிக்க:தரமான தார்ப்பாய் உற்பத்தியாளர்கள்.

 

 

Leave a Reply