தூதுவளை சாகுபடியில் சிறந்த லாபம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் தூதுவளை சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய தூதுவளை சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Beginning of Dhoothuvala cultivation

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் தூதுவளை சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய குடும்பம் விவசாய குடும்பம் எனவும் இவருடைய சிறுவயதிலிருந்தே இவர் விவசாயத்தை பார்த்து வளர்ந்து வந்ததாக கூறுகிறார்.

இதன் காரணமாக இவர் விவசாயத்தை செய்ய தொடங்கியதாகவும், புளிச்சக்கீரை மற்றும் பிரண்டை போன்றவையையும் இவர் சாகுபடி செய்ததாக கூறுகிறார்.

மேலும் இவருக்கு தூதுவளை சாகுபடியில் மிகுந்த ஆர்வம் இருந்த காரணத்தினால் தூதுவளை சாகுபடி செய்ய தொடங்கியதாகவும், இப்பொழுதும் இந்த தூதுவளை சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

தூதுவளை சாகுபடி செய்யும் முறை

தூதுவளை சாகுபடி செய்யும் முறை மிகவும் சுலபமான ஒரு முறை எனவும் இதனை அனைவராலும் மிக சிறப்பாக செய்ய முடியும் என கூறுகிறார்.

தூதுவளை சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றை போட்டு நிலத்தை நன்றாக உழுது பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை தயார் செய்து வைத்த பிறகு அதில் தூதுவளை செடிகளை நட வேண்டும் எனவும், இவருடைய நிலத்தில் இவர் 500 தூதுவளை செடிகளை வைத்திருப்பதாக கூறுகிறார்.

தூதுவளை செடிகளை நட்டு அதற்க்கு சரியான முறையில் நீரினை அளித்து வளர்த்து வந்தால் செடி நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

ஒருமுறை சாகுபடி செய்த தூதுவளை விளைச்சல் முடிந்ததும் அந்த தூதுவளை செடியில் உள்ள விதைகளை எடுத்து வைத்துக் கொண்டால் மறுமுறை தூதுவளை சாகுபடி செய்வதற்கு அது உதவியாக இருக்கும் என கூறுகிறார்.

Medicinal properties and uses of Dhoothuvala

தூதுவளையில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதாகவும், இது நமது உடலுக்கு அதிக அளவில் நன்மையை அளிக்கக்கூடும் எனவும் கூறுகிறார்.

தூதுவளை நமக்கு அதிக அளவு பயன்களை அளிக்கக்கூடிய ஒரு மருந்தாகும் எனவும் இதனை அதிகமாக மருத்துவத்திற்கு பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

சளி மற்றும் ஆஸ்துமா நோய்களுக்கு இந்த தூதுவளை மிகவும் பயனுள்ள ஒரு மருந்து எனவும், இதனை தினமும் நாம் எடுத்துக் கொண்டால் சளி நமக்கு பிடிக்காது எனக் கூறுகிறார்.

மேலும் இந்த தூதுவளையில் வைட்டமின் மற்றும் கால்சியம் அதிகம் இருப்பதாகவும் இதனை நாம் எடுத்துக் கொண்டால் எலும்புகளுக்கு மிகவும் நன்மை என கூறுகிறார்.

இந்த தூதுவளையை நாம் தினமும் எடுத்துக் கொண்டால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் எனவும், இதனால் நமக்கு சளி நோய் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

சளி நோய் நமக்கு ஏற்படாமல் இருந்தால் நுரையீரல் நன்றாக செயல்படும் எனவும் கூறுகிறார்.

உரம் மற்றும் பராமரிப்பு முறை

தூதுவளை சாகுபடியை இவர் இயற்கை முறையில் செய்து வருவதாகவும், செயற்கை உரங்கள் எதையும் இவர் அதிகமாக அளிப்பதில்லை எனவும் கூறுகிறார்.

தூதுவளை சாகுபடி செய்வதற்கு இவர் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

இந்த தூதுவளை சாகுபடியில் அதிக அளவில் பராமரிப்பு இருக்காது எனவும் குறைந்த அளவு பராமரிப்பு மட்டுமே இருக்கும் எனவும் கூறுகிறார்.

தூதுவளை செடி இருக்கும் இடத்தில் கலைச்செடிகள் அதிகமாக இல்லாதவாறு பராமரித்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

தூதுவளை செடிகளுக்கு இதுவரையில் எந்த நோய் தாக்குதலும் ஏற்படவில்லை எனவும், தூதுவளை சாகுபடியில் நோய் தாக்குதல் எதுவும் இருக்காது எனவும் கூறுகிறார்.

தூதுவளையை மதிப்பு கூட்டல் செய்யும் முறை

தூதுவளையை இவர் மதிப்பு கூட்டல் செய்து விற்பனை செய்து வருவதாகவும் இந்த முறையில் தூதுவளையை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்தால் சிறந்த லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.

தூதுவளை இலையை வைத்து இவர் தூதுவளை தொக்கு செய்து விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் தூதுவளை ரசப்பொடி, தூதுவளை சூப்பு பொடி ஆகியவற்றை தயாரித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் தூதுவளை சாதப்பொடி மற்றும் வெறும் தூதுவளை பொடி ஆகியவற்றை தயாரித்து நம் உணவில் எடுத்துக் கொள்ளலாம் என கூறுகிறார்.

இவர் தூதுவளை இலையை மட்டும் எடுத்துக்கொண்டு இலையை வறுத்து அதனை இயந்திரத்தில் போட்டு அரைத்து அதில் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை போட்டு தூதுவளை தொக்கினை தயாரித்து வருவதாக கூறுகிறார்.

தூதுவளை செடியில் அதிகளவில் முள் இருப்பதால் விவசாயிகளில் அதிக பேர் இந்த தூதுவளை சாகுபடியை செய்வதில்லை என கூறுகிறார்.

தூதுவளை சாகுபடியை செய்து அதனை மதிப்பு கூட்டல் செய்து விற்பனை செய்யும் போது அதிலிருந்து நமக்கு நிறைந்த லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.

Harvesting and watering system

தூதுவளை சாகுபடியில் நீர் தேவை அதிகமாக இருக்காது எனவும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீரினை செடிகளுக்கு அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

தூதுவளை செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி வருவதாகவும், சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தினால் நீர் குறைந்த அளவு செலவாகும் எனவும் கூறுகிறார்.

தூதுவளை செடியை நட்டு அது நன்றாக வளர்ந்து காய் வைத்து காய் பழுக்க தொடங்கியதும் தூதுவளையை அறுவடை செய்ய தொடங்கி விட வேண்டும் என கூறுகிறார்.

தூதுவளையை அறுவடை செய்வதற்கு இயந்திரங்களை இவர் பயன்படுத்துவதில்லை எனவும் கைகளின் மூலமே அறுவடை செய்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு அறுவடை செய்த தூதுவளையை தனித்தனி இலைகளாக பிரித்து அதனை மதிப்பு கூட்டல் செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

தூதுவளையை இயற்கையான முறையில் சாகுபடி செய்து, தூதுவளை இலையை வைத்து தூதுவளை தொக்கு மற்றும் சமையலுக்கு பயன்படும் பொடிகளை தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

தூதுவளை தொக்கு மற்றும் தூதுவளை பொடி ஆகியவற்றை தயாரித்து இவர் சந்தைகளில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் இவருடைய ஊரில் உள்ள மக்களும் இவரிடம் வந்து இந்த தூதுவளை தொக்கு மற்றும் பொடிகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இயற்கையான முறையில் தூதுவளை சாகுபடி செய்து அதனை மதிப்பு கூட்டல் செய்து விற்பனை செய்து வருவதால் அதிகளவு வாடிக்கையாளர் இவரிடம் தூதுவளை தொக்கு மற்றும் பொடிகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

தூதுவளையை மதிப்பு கூட்டல் செய்து செய்வதால் இதன் மூலம் இவருக்கு சிறந்த லாபம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த தூதுவளை சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் தகவல்:கற்றாழை விவசாயத்தில் நிறைந்த வருமானம்.

Leave a Reply