தமிழ்நாட்டின் பறவைகள் மற்றும் கால்நடைகளின் சொர்க்கம்

திருச்சி மாவட்டம் முசூறி தாலுகாவைச் சேர்ந்த திரு நவீன் என்பவர்கள் அரியவகை கால்நடைகளை வைத்து உள்ளார். அவற்றை சுதந்திரமாக வளர்க்கும் அவரையும் அவரின் அந்த பண்ணையையும் இத் தொகுப்பில் காணலாம்.

திரு நவீன் அவர்களின் வாழ்க்கை

திருநவீன் என்பவர் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவைச் சேர்ந்த அங்குள்ள ஊரில் வசித்து வருகிறார். இவர் பொறியியல் படிப்புகளில் பல பட்டங்களைப் பெற்றவர்.

இவர் அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர் பொறியியல் துறையில் பல பட்டப் படிப்புகளில் முடித்தவர். அதனால் அவருக்கு அங்கு தகுதிக்கேற்ப ஊதியம் கிடைத்தது. ஆனால் அவர் கால்நடைகளின் மீது அதிக ஆசையும் பேரன்பும் கொண்டதால் தனியாக ஒரு கால்நடை பூங்காவையும் மாட்டுப் பண்ணையும் தொடங்கலாம் என்று முடிவு செய்தார்.

அப்படி தொடக்கமான அவரின் பூங்காவிற்கு அவரின் பெயரையே வைத்து திருச்சி மாவட்டத்தில் ஒரு அரியவகை பூங்கா என பிரபலமடைந்து பண்ணை வளர்ப்பில் சாதித்த திரு நவீன் அவர்களின் பூங்காவையும் அவரையும் காணலாம்.

பூங்காவின் தொடக்கம்

நவீன் அவர்களின் பூங்கா திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி தாலுகாவில் உள்ளது. அவர் பூங்கா வைக்கப்பட்டுள்ள இடமானது விவசாயம் பார்க்க இயலாத அவர்கள் வளர்ச்சி அடைந்த நிலமாகும்.

பூங்காவின் ஆரம்பம் மற்றும் அவற்றின் பாதையிலே மக்கள் பார்த்து இயக்கும் அளவிற்கு பூங்காவின் ஆரம்ப பாதை தொடங்கும்.

பூங்காவின் ஆரம்ப பாதையில் வலது பக்கம் ஒட்டகம் மற்றும் இடது பக்கம் பெரிய பெரிய அளவில் மரங்களை நட்டு அவற்றின் மேற்பகுதியில் ஆந்தை மற்றும் பல்வேறு பறவைகள் ஆகியவற்றின் கூடுகள் இருக்கும்.

அவற்றில் பல்வேறு பறவைகளும் ஆந்தைகளும் இருக்கும். இக்கால குழந்தைகளுக்கு அக்கால பறவைகள் என்பது எதுவுமே தெரியாத அளவிற்கு தான் இருக்கும். அதனால் ஆட்சி தெரியப்படுத்தும் வகையில் பூங்காவின் ஆரம்ப பாதையிலே வைத்து வளர்க்கப்படுகிறது.

இது அங்கு வரும் மக்களின் உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்க தூண்டுகின்றது. இவ்வாறு செய்வதால் அங்குள்ள விலங்குகளை காண மேலும் ஆர்வம் அடைகின்றனர்.

இயற்கை தாவரங்களும் அமைவிடமும்

ஆரம்ப பாதையிலிருந்து பறவைகள் மற்றும் ஒட்டகங்களை பாடிய பின்னர் அவற்றிற்கு அடுத்தது ஒரு இயற்கையான தாவரங்கள் வளர்க்கப்படும் மற்றும் பறவைகள் தங்குவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட ஒரு இயற்கை பூங்காவாகும் உள்ளது.

அவற்றில் பல்வேறு இயற்கை குணம் வாய்ந்த தாவரங்களும் இயற்கை வேர்களும் மற்றும் மருத்துவ குணங்கள் உடைய தாவரங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

அங்குள்ள விலங்குகளுக்கு ஏதாவது நோய்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அங்குள்ள இயற்கை தாவரங்களால் முதலில் வைத்தியம் செய்வார்கள் பின்பு அவற்றில் எந்த ஒரு பலனும் இல்லாவிட்டால் தன் ஆங்கில மருந்துகளையும் கால்நடை மருத்துவரையும் அணுகுவார்கள்.

இவ்வாறு வளர்க்கப்பட்ட இயற்கை தாவரங்களை தங்களுடைய பயன்பாட்டிற்கும் மற்றும் சித்த மருத்துவத்திற்கு தேவையான பயன்பாட்டிற்கும் பயனுள்ளதாக செய்வார். இவ்வாறு செய்வதன் மூலம் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.

மேலும் அங்குள்ள விலங்குகளுக்கு தீவனங்கள் பற்றாக்குறை இன்றியும் இருக்கின்றன .இவ்வாறு இயற்கை தீவனங்களை  சாப்பிடுவதால் அங்குள்ள விலங்குகளுக்கு எந்த நோயுமின்றி ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் உள்ளது.

கால்நடைகளின் வகைகளும் அவற்றின் பராமரிப்பும்

திரு நவீன் அவர்களின் பூங்காவில் அளவற்ற கால்நடைகள் உள்ளன. அவற்றின் வகைகளை காணலாம்.

பறவைகள் வகையில் கிளி ,புறா, மைனா, கடல் காகம், மயில், மயில் வகையில் ஆண் மயில் மற்றும் பெண் மயில், காதல் பறவைகள், மரங்கொத்தி, நீர்ப்பறவை, ஆந்தை, பொன்னேரி குருவிகள், தேன்சிட்டுகள் ,கொக்கு ,நாரை, மேலும் பல பறவைகள் போன்றவை இதில் உள்ளன.

விலங்குகளின் அடிப்படையில் நாய், கழுதை, ஒட்டகம் ,மாடு, நெருப்புக்கோழி மற்றும் பல்வேறு விலங்குகள் உள்ளன.

இவர் வளர்க்கப்பட்டு விலங்குகளுக்கு தீவனங்களும் அதுக்கு தேவையான உணவுகளும் அவர்களின் தாவரங்களில் இருந்து கிடைக்கும். இவ்வாறு செய்வதால் கால்நடைகளுக்கு தீவனங்களும் பறவைகளுக்கு இழைகளும் கிடைக்கின்றன.

அதை உண்டு கால்நடைகளும் பறவைகளும் வெளியிடும் சாணங்களை அவர் வைத்திருக்கும் அவருக்குச் சொந்தமான காடுகளுக்கு உரமாக பயன்படுத்துகின்றன. இது போன்று இயற்கையான உரங்களை காடுகளுக்கு போடுவதால் மண்ணின் தரமும் குறையாமல் இயற்கையான முறையில் சத்து நிறைந்து காணப்படும்.

வருமானம் ஈட்டும் கால்நடைகள்

திரு நவீன் அவர்களிடம் பல்வேறு அரிய வகை விலங்குகள் உள்ளது. மேலும் அவர்களிடம் நம் வாழ்வில் அன்றாட காணும் கால்நடைகளும் உள்ளன. அவற்றில் அரியவகை கால்நடைகள் வளர்ப்பதற்கும் விற்பதற்கும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த பூங்காவிற்கு பார்க்க வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதனை பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் அவனை வாங்கியும் வளர்ப்பதற்கும் அவர்களிடம் கால்நடைகள் உள்ளன.

அவற்றை அவர்களிடம் நேரடியாக சென்றும் அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டும் அல்லது அவர்களின் இணையதளத்தில் தொடர்பு கொண்டும் நாம் வளர்க்கும் கால்நடைகளை குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

கால்நடைகளில் இருந்து பல்வேறு விதமாக வருமானம் ஈட்டுகிறார் திரு நவீன் அவர்கள். பொதுவாக ஒரு பண்ணை என்று எடுத்துக்கொண்டால் மாற்று பண்ணையாக இருந்தால் அவற்றின் மூலம் பால் விற்பதன் மூலம் லாபம் பெறலாம். ஆனால் இவருக்கு பல்வேறு விதமாக லாபம் கிடைக்கிறது.

இவருக்கு மாடு ஆடு கோழிகள் நாய்கள் புறாக்கள் கிளிகள் கழுதை போன்றவைகளில் இருந்து பெருமளவு லாபம் கிடைக்கிறது.

உதாரணமாக மாடுகளில் இருந்து பால் கிடைக்கிறது. அவற்றின் மூலம் லாபம் காண்பீர்கள். ஆனால் அவர் பல்வேறு விதமாக லாபம் காண்கிறார்.

கால்நடைகள் போடும் குட்டிகளிலிருந்தும் அவை போடும் சாணங்களில் இருந்தும் அவைகளிடமிருந்து பெரும் பால் மூலமாகவும் லாபம் காண்கிறார்.

திரு நவீன் அவருக்கு கழுதைகளிலிருந்து பெருமளவு லாபம் கிடைக்கின்றது. சராசரியாக ஒரு கழுதையின் விலை 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை கிடைக்கின்றது. அவை போடும் குட்டி குறைந்த அளவு 10,000 முதல் 20,000 வரை விற்கப்படுகிறது. கழுதையின் பாலானது மாட்டுப் பாலை விட மூன்று மடங்கு விலை அதிகமாகும்.

கழுதை களில் மட்டுமே அதிக அளவு வருமானம் கிடைக்கிறது. ஒரு வருடத்திற்கு கழுதைகளில் இருந்து மட்டுமே சுமார் 2 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்.

மாடுகளில் அதிக அளவிலான வருமானம் இல்லாவிட்டாலும் போதிய அளவு வருமானம் கிடைக்கிறது. மாடுகள் போடும் சாணங்களில் பாதியளவு அவரின் காடுகளுக்கு உரமாகவும் மீதி உள்ளதை சாண எரிவாயுவிற்க்கும் பயன்படுத்துகிறார்.

இதுபோன்று தனித்தனியாக பிரித்து பயன்படுத்துவதால் காடுகளுக்கு இயற்கையான சத்து நிறைந்த உரங்களும் அவர்களின் தேவைகளுக்கு போதுமான எரிவாயு கிடைக்கிறது. இதன்மூலம் லாபமும் காண்கிறார். மேலும் அவரின் உபயோகத்திற்கு தேவையான எரிபொருளையும் மீதபடுத்துகிறார்.

கால்நடைகளின் நோய்களும் அவற்றின் தீர்வுகளும்

கால்நடைகளுக்கும் மற்றும் பறவைகளுக்கும் போதுமான சத்து குறைபாடு ஏற்படும் நோய்களுக்கும் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் நேரடியாக தீர்வு காண்கிறார்.

அவர் வளர்க்கும் இயற்கையான காடுகளிலிருந்து பல்வேறு மருத்துவ குணம் வாய்ந்த இயற்கையான சித்த மருத்துவத்திற்கும் தேவைப்படும் பல்வேறு மூலிகைகளை வளர்த்து வருகின்றார்.

கால்நடைகளுக்கு ஏதாவது சாதாரணமான பிரச்சனையாக இருந்தால் அவற்றை நேரடியாக அவர்களிடமுள்ள இயற்கை குணம் வாய்ந்த மூலிகைகளை வைத்து சரி செய்கிறார்.

இவ்வாறு இயற்கையான பொருட்களை பயன்படுத்தி மருத்துவம் பார்ப்பதால் கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் எந்த பக்கவிளைவுகள் இன்றி குணமாகிறது.

இவர்கள் பார்க்கும் மருத்துவத்திற்கு நோய்கள் குணமாக விட்டாள் மட்டுமே கால்நடை மருத்துவர் அல்லது ஆங்கில மருத்துவ முறையை பயன்படுத்துவார்கள்.

இதுமட்டுமல்லாமல் காடுகளில் விலையும் இயற்கை குணம் வாய்ந்த மூலிகைகள் மற்றும் மூலிகை வேர்களை சித்த மருத்துவத்தில் கொடுத்து அங்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு பயன்படுத்தும் விதமாக செய்கிறார்.

இயற்கையான பசுமை வீடு

திரு நவீன் அவர்களின் பூங்காவிற்கு சுற்றிப் பார்க்கும் வரும் பார்வையாளர்களுக்கு பூங்காவை முழுவதும் பார்த்து ரசிக்க ஒரு நாள் போதாது என்று நன்கு தெரிந்துகொண்ட அவர் அங்கு வரும் வாடிக்கையாளர் அனைவரும் பூங்காவை முழுமையாக சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எண்ணினார்.

மேலும் பார்வையாளர்கள் அனைவருக்கும் அனைத்தையும் பார்க்க முடியாமல் போய்விட்டது என்று எண்ணி விடக்கூடாது என்ற நோக்கத்துடனும் அவர் ஒரு முடிவு செய்தார்.

பார்வையாளர்கள் ஒரு நாள் முழுவதும் சுற்றி பார்க்கும் விதமாக ஒரு தனி பிரிவாகும். மேலும் இன்னொரு பிரிவாக இரண்டாம் நாள் காணும் அளவிற்கு பிரித்துள்ளார்.

அவர் வாடிக்கையாளர்கள் தங்குவதற்கு இயற்கையான ஒரு பசுமை வீட்டை வடிவமைத்துள்ளார். அது ஒரு மரத்தின்மேல் இருக்கும் வீடாக வடிவமைத்துள்ளார். வீட்டிலிருந்து பார்க்கும்போது பூங்காவின் மொத்த அழகையும் ரசிக்கும் அளவில் ரம்மியமான முறையில் கட்டியுள்ளார்.

இவ்வாறு வீட்டினை வடிவமைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று மரத்தின்மேல் வீடு உள்ளதால் விலங்குகளாலும் வேறு யாராலும் எந்த ஒரு பிரச்சனையின்றி அமைதியான முறையில் இயற்கையை ரசிக்கவும் வடிவமைத்துள்ளார். இரண்டாவது அந்த வீட்டில் இருந்து பார்த்தால் ஒரு மலையின் மீது உள்ள வீட்டிலிருந்து இயற்கை காட்சிகளை வசிப்பது போன்று இருக்க வேண்டும் என்று எண்ணி அவற்றினை வடிவமைத்துள்ளார்.

இதற்கு குறைந்த அளவு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அங்கு தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

அங்கு சைவம் மற்றும் அசைவம் என இரண்டுமே கிடைக்கும். ஆனால் அங்கு மது அருந்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு வசதிகளை கொண்ட கால்நடைகள் மற்றும் பறவைகளின் பூங்காவானது தமிழ்நாட்டில் மிகவும் குறைந்த அளவே காணப்படுகிறது.

இது போன்ற அரியவகை கால்நடைகள் மற்றும் பறவைகள் பூங்கா வாழவே தமிழ்நாட்டில் குறைந்த அளவே காணப்படுகிறது. அரியவகை விலங்குகள் ஆனது காடுகள் மற்றும் மலைகள் போன்றவற்றில் மட்டுமே அதிகம் காணப்படுகிறது.

ஆனால் அங்கு சென்று விலங்குகளின் அருகிலும் பார்க்கவும் முடியாது அவற்றுடன் விளையாடுவும்  முடியாது. ஆனால் இவர்களிடம் அதுபோன்ற அரிய வகை விலங்குகளை பார்ப்பது மட்டுமல்லாமல் அவைகளுடன் அருகில் சென்றேன் நம் மனதுக்குப் பிடித்தவாறு விளையாடவும் முடியும்.

இவர்களிடம் அதிக அளவு அரியவகை விலங்குகள் இல்லாவிட்டாலும் போதுமான அளவு அரியவகை விலங்குகள் உள்ளன. அவற்றுடன் நம் பயப்படாமல் சந்தோசமகவும் விளையாடவும் அது விளையாடும் அளவையும் அருகிலிருந்து மகிழ்ச்சியாக பார்க்கலாம்.

இதுபோன்ற பல்வேறு வசதிகள் உடைய கால்நடைகள் மற்றும் பறவைகளின் பூங்காவானது தமிழ்நாட்டில் குறைந்த அளவு காணப்படுகிறது.

இதுபோன்று விலங்குகளுக்கு எந்த ஒரு இடையூறும் இன்றி அவைகளின் விருப்பத்திற்கேற்ப மகிழ்ச்சியாக இருப்பதால் இவை தமிழ்நாட்டின் கால்நடைகள் சுதந்திர பூங்கா என்றும் தமிழ்நாட்டின் சொர்க்க பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க:மீன் வளர்ப்பில் நிறைந்த வருமானம்..

 

 

 

 

 

 

Leave a Reply