பச்சை மிளகாய் சாகுபடியில் சிறந்த லாபம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பச்சை மிளகாய் சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய பச்சை மிளகாய் சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Beginning of green chilli cultivation

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பச்சை மிளகாய் சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

பச்சை மிளகாய் சாகுபடியை இவர் கடந்த இரண்டு வருடங்களாக செய்து வருவதாகவும், வீட்டில் இவர் இருப்பதால் ஏதாவது ஒரு வேலை செய்யலாம் என்ற எண்ணத்தில் பச்சை மிளகாய் சாகுபடியை தொடங்கியதாக கூறுகிறார்.

இவருடைய திருமணத்திற்கு முன்பு இவருடைய தந்தை வீட்டில் பச்சை மிளகாய் சாகுபடி செய்வார்கள் எனவும், இவருடைய தந்தை வீட்டில் பச்சை மிளகாய் சாகுபடி செய்யும் முறையைப் பற்றி இவர் அறிந்து கொண்டதாக கூறுகிறார்.

பச்சை மிளகாய் சாகுபடி முறையைப் பற்றி இவருக்கு நன்கு தெரியும் என்ற காரணத்தினால் இவர் பச்சை மிளகாய் சாகுபடியை தொடங்கி இப்பொழுது சிறப்பான முறையில் பச்சை மிளகாய் சாகுபடியை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருக்கு இந்த பச்சை மிளகாய் சாகுபடியின் மூலம் சிறந்த லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

பச்சை மிளகாய் சாகுபடி செய்யும் முறை

பச்சை மிளகாய் சாகுபடியை இவர் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், செயற்கை உரங்கள் எதையும் அதிகமாக அளிக்காமல் இயற்கை உரங்களை மட்டும் அளித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மிளகாய் சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை இரண்டு முறை உழுது பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், ஒரு முறை உழுத பிறகு நிலத்தினை ஆறவிட்டு மீண்டும் ஒருமுறை உழவு ஓட்ட வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை நன்றாக உழுத பிறகு நிலத்திற்கு உரமாக இயற்கை உரத்தினை அளிப்பதாகவும், இயற்கை உரத்தினை பயன்படுத்தினால் செடிகள் நன்றாக வளர்ந்து அதிக விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

மிளகாய் சாகுபடியை விதைகளின் மூலமும் மற்றும் நாற்றுகளின் மூலமும் செய்யலாம் எனவும், விதைகளை வாங்கி நாற்றுக்கள் உருவாக்கி சாகுபடி செய்தால் அது நமக்கு செலவு குறைவாக இருக்கும் எனவும், இதுவே நாற்றுகளாக மிளகாய் செடிகளை வாங்கி சாகுபடி செய்தால் செலவு அதிகமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

இவர் மிளகாய் விதைகளை வாங்கி இவரே நாற்றுகளை உருவாக்கி மிளகாய் சாகுபடி செய்து வருவதாகவும், இந்த முறை இவருக்கு மிகவும் சுலபமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

மிளகாய் நாற்றினை உருவாக்கிய பிறகு அந்த நிலத்தில் இவர் நாற்றினை நட்டு வளர்த்து வருவதாகவும், ஒவ்வொரு நாற்றுகளுக்கு இடையிலும் இரண்டிலிருந்து மூன்று அடி இடைவெளி விட்டு நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இந்த பச்சை மிளகாய் சாகுபடியை இவர் முக்கால் ஏக்கர் நிலத்தில் செய்து வருவதாகவும், இந்த முக்கால் ஏக்கர் நிலத்தில் இருக்கும் அனைத்து மிளகாய் செடிகளையும் இவர் சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

உரம் மற்றும் பராமரிப்பு முறை

மிளகாய்ச் செடிகளுக்கு இவர் அதிக அளவில் இயற்கை உரங்களை மட்டுமே அளித்து வளர்த்து வருவதாகவும் செயற்கை உரங்கள் எதையும் அதிகமாக அளிப்பது இல்லை எனவும் கூறுகிறார்.

இயற்கை உரமான மாட்டுச்சாணம், ஆட்டுப் புழுக்கை மற்றும் கோழி கழிவுகள் ஆகியவற்றை செடிகளுக்கு அளித்து வருவதாகவும், இவருடைய பண்ணையில் கால்நடைகள் இருப்பதால் அதிலிருந்து உரங்கள் கிடைக்கும் எனவும், இதனை செடிகளுக்கு இவர் உரமாக அளித்து விடுவதாக கூறுகிறார்.

செடிகளுக்கு இயற்கை உரத்தினை அளித்து வளர்ப்பதினால் செடிகள் நன்கு வளர்ந்து அதிக அளவில் விளைச்சலை அளிக்கும் எனவும் எனவே அனைவரும் இயற்கை உரத்தை பயன்படுத்தினால் அதிக லாபத்தை பெறலாம் எனக் கூறுகிறார்.

இந்த மிளகாய் சாகுபடியில் பராமரிப்பு அதிக அளவில் இருக்காது எனவும், செடிகளுக்கு தேவையான நீரை மட்டும் அளித்துவிட்டு செடிகளுக்கு நோய் தாக்குதல் வருகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் வீட்டில் இருந்து இவருடைய தோட்டத்தை பராமரித்து கொள்வதால், இவருடைய தோட்டத்தில் உள்ள எந்த செடிகளுக்கும் அதிக அளவில் நோய் தாக்குதல் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

மேலும் தோட்டத்தில் களைச்செடிகள் இருந்தால் அதனை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், களைச்செடிகளை சுத்தம் செய்யாமல் இருந்தால் மிளகாய்ச் செடியின் சத்தினை களைச்செடிகள் எடுத்துக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.

மேலும் விடுமுறை நாட்களில் இவருடைய குடும்பம் இவருடைய தோட்டத்தை பராமரித்து கொள்ளும் எனவும் இதனால் இவருக்கு வேலை அதிக அளவில் இருக்காது எனவும் சிறப்பான முறையில் தோட்டத்தை பராமரித்து கொள்வதாகவும் கூறுகிறார்.

Harvesting and watering system

மிளகாய் நாற்று நட்ட பிறகு செடிகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் எனவும், மண்ணின் ஈரம் காயக்காய செடிகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் எனவும், இந்த முறையில் நீரினை அளித்தால் செடி நன்றாக வளரும் வரை மட்டுமே எனக் கூறுகிறார்.

நாற்று நன்றாக வேர் பிடித்த பிறகு செடிகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை மட்டும் நீரினை அளித்தால் போதுமானது எனவும் தினமும் செடிகளுக்கு நீரினை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறுகிறார்.

மிளகாய்ச் செடிகளுக்கு இவர் நீரினை அளிப்பதற்கு சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும் இந்த முறையில் நீரை செடிகளுக்கு அளிப்பது சுலபமாக இருக்கும் எனவும், நீர் அதிகளவில் வீணாகாது எனவும் கூறுகிறார்.

களிமண் காட்டில் மிளகாய் சாகுபடி செய்தால் நீரினை அதிகளவில் செடிகளுக்கு அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் ஏனெனில் களி மண்ணில் ஈரப்பதம் அதிகளவில் இருந்து கொண்டே இருக்கும் எனக் கூறுகிறார்.

மேலும் மிளகாய் செடிகளில் நீர் தேங்கி நிற்கக்கூடாது எனவும், நீர் தேங்கி இருந்தால் வேர்கள் அழுகி விடும் எனவும், எனவே மண்ணில் ஈரப்பதம் இல்லாமல் பராமரித்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

விதைகளை விதைத்த 105 வது நாளில் செடிகளிலிருந்து பச்சை மிளகாயை அறுவடை செய்ய தொடங்கி விடலாம் எனவும், நாற்றுகளாக மிளகாய்ச் செடி நடும் போது 75 நாட்களில் செடி அறுவடைக்கு வந்து விடும் என கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

பச்சை மிளகாயை அறுவடை செய்து இவருடைய ஊரிலுள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் இவரிடம் பச்சை மிளகாய் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் பச்சை மிளகாயை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இன்றுள்ள நிலையில் அதிகளவு மக்கள் பச்சை மிளகாயை கொண்டே உணவை சமைக்கிறார்கள் எனவும் இதனால் பச்சை மிளகாய் அதிக விலைக்கு விற்பனையாகி வருகிறது எனவும், இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய பச்சை மிளகாய் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் இயற்கை வழிமுறைகளுடன் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான சின்ன வெங்காயம் சாகுபடி.

Leave a Reply