சிறப்பான தாய்லாந்து ஆட்டுப்பண்ணை.

தாய்லாந்து நாட்டில் வாழும் ஒருவர் பட்டாயா ஆட்டுப்பண்ணை என்னும் ஒரு பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகின்றார். இந்த நாட்டு மக்களைப் பற்றியும், இவர்களின் ஆட்டுப்பண்ணை வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Life of the People of Thailand

தாய்லாந்து நாட்டில் வாழும் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பட்டாயா ஆட்டுப் பண்ணையை வைத்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருவதாகவும், மற்றும் இவர்கள் இந்த ஆட்டுப் பண்ணையை மிகவும் புதிய முறையில் வளர்த்து வருவதாகவும் கூறுகின்றார்.

இவர்கள் பண்ணையில் வளரும் ஆடுகள் மற்றும் பன்றிகள், முயல்கள் போன்ற அனைத்து வகை விலங்குகளை மிகவும் சுத்தமான முறையில் எந்தவித நோய்களும் தாக்காது வகையிலேயே வளர்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இவர்களுடைய பண்ணையில் உள்ள குதிரைகள், ஆடுகள் மற்றும் பன்றிகள், முயல்கள் போன்றவைகள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாலும், இவைகளை மிகவும் சுத்தமான முறையில் வளர்ப்பதால் இவைகளை எல்லாம் பல ஊர்களில் இருந்து வருபவர்கள் பார்ப்பதற்கு கண்காட்சி பொருட்களாக வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இவர்கள் மிகவும் புதிய வகைகளில் இவைகளை எல்லாம் வளர்த்து வெறும் இறைச்சிக்காக மட்டும் விற்பனை செய்யாமல், புதிய வழி முறையில் இவைகளை எல்லாம் மிகவும் தூய்மையான முறையில் வளர்த்து அவைகளுக்கு எந்த நோய்களும் தாக்காமல், கண்காட்சிப் பொருளாக வைத்து அதன் மூலம் லாபத்தை பெற்று வருகின்றனர்.

பண்ணையின் அமைப்பு மற்றும் வளர்ப்பு முறை

தாய்லாந்து நாட்டில் ஆட்டுப் பண்ணையை வைத்து வளர்த்தும் பண்ணையாளர்கள் அனைவரும் மிகவும் சிறப்பான முறையில் ஆட்டுப் பண்ணையை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவர்கள் ஆடுகளை வைத்து வளர்ப்பதற்கு கொட்டகையில் எந்த வித பரண் போன்ற அமைப்பையும் அமைப்பதில்லை எனவும், மற்றும் ஆடுகளுக்கு உணவை வைப்பதற்கு ஒரு பிளாஸ்டிக்கால் ஆன பொருளை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

மற்றும் ஆடுகள் அனைத்தையும் தரையிலேயே வளர்த்து வருவதாகவும், மற்றும் பண்ணையை இவர்கள் மிகவும் தூய்மையான முறையில் சுத்தம் செய்து பண்ணையை தூய்மையாக வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

மேலும் இவர்கள் ஆடுகளுக்கு உணவினை பிளாஸ்டிக்கால் ஆன பொருளில் போட்டு வைப்பதால் உணவு வீணாவது இல்லை எனவும், இதனால் இவர்களுக்கு செலவுகள் குறையும் எனவும் கூறுகின்றனர்.

மேலும் இந்த ஆடுகள் மற்றும் பண்ணையில் உள்ள அனைத்து விலங்குகளையும் பார்க்க வரும் கண்காட்சியாளர்களுக்கு ஆடுகள் வேண்டும் என்றால் அவர்களுக்கும் இந்த ஆடுகளை விற்பனை செய்து வருவதாகவும், இந்த ஆடுகள் வைக்கோல் வகைகளை அதிக அளவு விரும்பி உண்பதாகவும்  கூறுகின்றனர்.

மேலும் இவர்கள் ஆடுகளுக்கு வரும் நோய்களை தடுப்பதற்கு தடுப்பூசி வகைகளை பயன்படுத்தி வருவதாகவும், மற்றும் இவர்களுடைய பண்ணையில் இவர்கள் மான் வகைகளையும் வளர்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.

Organization Of the pig farm

தாய்லாந்து நாட்டில் வளர்க்கப்படும் அனைத்து பன்றிகளையும் மிகவும் சிறப்பான முறையில் தூய்மையாகவே வளர்த்து வருவதாகவும், மற்றும் இவைகளை மிகவும் சுகாதாரமான முறையில் வளர்த்து வதால் இவைகளுக்கு எந்த வித நோய்களும் ஏற்படுவதில்லை எனவும் கூறுகின்றனர்.

மற்றும் தமிழ் நாடுகளில் வளர்க்கப்படும் பன்றி வகைகளை இந்த அளவிற்கு சுகாதார முறையில் வளர்ப்பது இல்லை எனவும், ஆனால் தமிழ் நாட்டில் வெண்பன்றி வளர்ப்பை நல்ல முறையில் சுகாதாரமான முறையில் வளர்ப்பதாகவும் கூறுகின்றனர்.

மேலும் தாய்லாந்து நாட்டில் உணவினை உண்பதற்கும் மற்ற எந்த வகை உணவுப் பொருட்களையும் உண்பதற்கும் முள்கரண்டி வகைகளையே பயன்படுத்தி வருவதாகவும், இந்த முள் கரண்டி இவர்களுடைய நாட்டில் மிகவும் பிரபலமானது எனவும் கூறுகின்றனர்.

மேலும் இவர்கள் குதிரைகளை வைத்து பண்ணைக்கு வரும் பார்வையாளர்களுக்கு குதிரை சவாரியையும் செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் இவர்கள் பன்றி வகைகளிலேயே இரண்டு வகையில் பன்றி வகைகளை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து, அவற்றை உண்பதற்கு மற்றும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

முயல் வளர்ப்பு முறை

முயல் வளர்ப்பை இந்த தாய்லாந்து நாட்டில் பண்ணை வைத்து நடத்தி வரும் அனைவரும் செய்து வருவதாகவும், இந்த முயல் வளர்ப்பின் மூலம் அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும், முயல் இறைச்சி சுவையாக இருக்கும் என்ற காரணத்திற்காக அவைகள் அதிக அளவில் விற்பனையாகும் எனவும் கூறுகின்றனர்.

தமிழ் நாடுகளில் முயல் வளர்ப்பு முறையில் முயல்களை கூண்டில் வைத்து வளர்ப்பார்கள், ஆனால் இங்கு தாய்லாந்தில் முயல்களை அவ்வாறு கூண்டில் வைத்து வளர்க்காமல் சுதந்திரமாக சுற்றி திரிவதற்கும், பார்வையாளர்கள் அந்த முயல்களுக்கு உணவினை அளிப்பதற்கும் அனுமதி அளிக்கின்றனர்.

மேலும் இவ்வாறு பார்வையாளர்கள் முயல்களுக்கு உணவினை அளிக்கும்போது பார்வையாளர்கள் கொண்டுவந்துள்ள உணவினை முயல்களுக்கு அளிக்காமல், இவர்கள் வைத்துள்ள உணவினையே பார்வையாளர்கள் முயல்களுக்கு அளித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் ஒரு கொட்டகையில் தரையில் முழுவதும் வைக்கோல்களை நிரப்பி அதன் மீது முயல்களை சுதந்திரமாக சுற்றி திரிவதற்கு விட்டு விடுவதாகவும், மேலும் இவைகளுக்கு உணவினை மிகச் சிறப்பான முறையில் அளித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் இந்த முயல் வகைகளை விற்பனை செய்து வருவதாகவும், ஒவ்வொரு அளவுகளில் உள்ள முயல்களையும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.

Ducks and cows

தாய்லாந்து நாட்டு பட்டாயா ஆட்டுப் பண்ணையில் வாத்துக்கள் மற்றும் மாடு வகைகளையும் வளர்த்து வருவதாகவும், இந்த வாத்து வகைகளை பன்றிகளையும் சேர்த்து வளர்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.

மற்றும் இந்த வாத்துக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் வகைகளை போன்று இருக்கும் எனவும், மேலும் இந்த வாத்துக்களை இறைச்சிக்காகவும், வளர்ப்பதற்காகவும் விற்பனை செய்து வருவதாகவும், இந்த வாத்துகளின் இறைச்சி மிகவும் சுவையாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

மேலும் இவர்கள் இவற்றுடன் மாடுகளையும் மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், இந்த மாடுகள் தமிழ்நாட்டில் உள்ள மாடுகளை போன்று இருக்கும் எனவும், மற்றும் இந்த மாட்டு வகைகளிலேயே பல வகை மாடுகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

கோழி வகைகள் மற்றும் கழுதைகள்

இவர்கள் இந்த பட்டாயா ஆட்டுப்பண்ணையில் கோழி வகைகளையும் வளர்த்து வருவதாகவும், இந்த கோழி வகைகளில் ஈமு கோழி வகைகள், வான் கோழி வகைகள் மற்றும் போண்டா கோழி வகைகள் ஆகிய மூன்று கோழி வகைகளை வளர்த்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் இங்கு கழுதைகளையும் வளர்த்து வருவதாகவும், இந்த கழுதை பண்ணை வளர்ப்பின் மூலம் இவர்களுக்கு மிகவும் நன்மை மற்றும் லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் இந்த கழுதைகளை மட்டும் வளர்ப்பதற்கு தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி அந்த இடத்தில் இந்த கழுதைகளை வளர்த்து வருவதாகவும், இவற்றுடன் இந்த கழுதைகள் மனிதர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ளும் எனவும் கூறுகின்றனர்.

மேலும் இவர்கள் குதிரை வகைகளை வளர்த்து வருவதாகவும் இந்த குதிரை வகைகளின் உயரமானது குறைவாகவே இருக்கும் எனவும், இந்த குதிரை மீது சிறுவர்களை ஏற்றி சவாரி செய்வதாகவும் கூறுகின்றனர்.

தாய்லாந்தில் உள்ள இந்த பட்டாயா ஆட்டுப்பண்ணை மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.

மேலும் படிக்க:மாட்டுப்பண்ணைக்கு பயன்படுத்தப்படும் சிறப்பான பாய் உற்பத்தி.

Leave a Reply