விரால் மீன் குஞ்சுகள் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

திரு ஜீவா அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி அருகே விரால் மீன் குஞ்சுகள் பண்ணை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய விரால் மீன் குஞ்சுகள் பண்ணை வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

Mr. Jeeva Their Life

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி அருகே திரு ஜீவா அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த பண்ணை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும், அதில் விரால் மீன் குஞ்சுகள் வளர்ப்பை அதிக அளவில் செய்து லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

இவர் இவருடைய பண்ணையில் திலேபியா மீன் வகைகள் மற்றும் விரால் மீன் குஞ்சுகள் இவற்றுடன் ஆடுமாடுகள், கோழிகள் ஆகியவைகளை வளர்த்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மற்றும் இவருடைய பண்ணையின் பெயர் மரியா ஒருங்கிணைந்த பண்ணை எனவும், இவர் பண்ணையில் வளர்க்கும் அனைத்து வகை மீன்கள் மற்றும் விலங்குகளையும் இவர் மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் விரால் மீன் குஞ்சுகளை மட்டுமே விற்பனை செய்து வருவதாகவும் தாய் விரால் மீன்களை இவர் விற்பனை செய்வதில்லை எனவும் கூறுகிறார்.

விரால் மீன் குஞ்சுகள் வளர்ப்பின் தொடக்கம்

திரு ஜீவா அவர்கள் தாய் விரால் குட்டை வைத்து விரால் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருவதாகவும், இதில் இவருக்கு அதிக லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவருக்கு ஆரம்பத்தில் விரால் மீன் வளர்ப்பை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்ததாகவும் ஆனால் விரால் மீன்கள் அதிக அளவு விலையில் இருந்ததால் இவர் விரால் மீன்களை வாங்கி வளர்க்க முடியவில்லை என கூறுகிறார்.

இதன் காரணமாக இவர் தாய் விரால் மீன்களை வாங்கி வந்து வளர்த்து அதன் மூலம் விரால் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும், இவர் நாட்டு விரால் மீன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த முறையில் இவர் தாய் விரால் மீன்களை வாங்கி வளர்த்து விரால் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவது இவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறுகிறார்.

Types of fingerlings

விரால் மீன்களில் வெவ்வேறு வகையில் விரால் மீன்கள் இருப்பதாகவும் அதில் இவர் நாட்டு விரால் மீன்களை வளர்த்து வருவதாகவும், நாட்டு விரால் மீன்கள் உடலுக்கு நன்மையை அளிக்கும் எனவும் திரு ஜீவா அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த நாட்டு விரால் மீன்களுக்கு தடுப்பூசிகள் எதையும் அளிப்பதில்லை எனவும், முற்றிலும் இயற்கையான முறையிலேயே இவர் விரால் மீன்களை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

ஏரி மற்றும் ஆறுகளில் விரால் மீன்கள் எந்த முறையில் இயற்கையாக வளர்ந்து இனப்பெருக்கம் செய்கிறதோ அந்த முறையில் இவர் குட்டை அமைத்து அதில் விரால் மீன்களை வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மற்ற விரால் மீன்களின் அடியில் வரிவரியாக கோடுகள் இருக்காது எனவும் ஆனால் நாட்டு விரால் மீன்களின் அடியில் வரிவரியாக கோடுகள் இருக்கும் எனவும் இதனை வைத்து நாட்டு விரால் மீன்களை  கண்டறிந்துகொள்ள முடியும் என கூறுகிறார்.

குட்டையின் அமைப்பு மற்றும் வளர்ப்பு முறை

திரு ஜீவா அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் விரால் மீன் குஞ்சுகளை வளர்த்து வருவதாகவும், அவைகள் நன்றாக வளர்வதற்கு குட்டையை மிக சிறப்பான முறையில் அமைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

தாய் விரால் குட்டை 40 அடி நீளம் மற்றும் 30 அடி அகலத்தில் அமைந்து இருப்பதாகவும், இந்த குட்டையில் 60 லிருந்து 70 தாய் விரால்கள் இருப்பதாகவும் இந்தத் தாய் விரால்கள் ஒரு கிலோவில் இருந்து ஒன்றரை கிலோ எடையில் இருக்கும் எனவும் கூறுகிறார்.

தாய் விரால் மீன்கள் ஆறுகளில் ஆழம் குறைவான மற்றும் அமைதியான ஒரு இடத்தில் முட்டை இடும் எனவும், ஆழம் அதிகமான இடங்களில் விரால் மீன்கள் முட்டை இடாது எனவும் திரு ஜீவா அவர்கள் கூறுகிறார்.

ஆறுகளில் எவ்வாறு அல்லி செடிகள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் இருக்கிறதோ அதேபோல் இவரும் இவருடைய குட்டையில் நீர்வாழ் தாவரங்களை வளர்த்து வருவதாகவும் இதனால் இந்த குட்டையில் உள்ள தாய் விரால் மீன்கள் நல்ல முறையில் வளர்ந்து முட்டைகளை போட்டு இறால் குஞ்சுகளை தருவதாக கூறுகிறார்.

மேலும் ஆண் மற்றும் பெண் விரால் மீன்கள் ஒரே அளவுகளில் இருக்க வேண்டும் எனவும், ஒரே அளவில் இருந்தால் மட்டுமே குஞ்சுகள் நல்ல முறையில் எந்த பாதிப்பின்றி கிடைக்கும் என திரு ஜீவா அவர்கள் கூறுகிறார்.

Feeding method

தாய் விரால் மீன்கள் முட்டையிட்டு 15வது நாளில் குஞ்சுகள் வெளியில் வந்து விடும் எனவும், குஞ்சுகளுக்கு அளிக்கும் தீவனத்தை பொறுத்து விரால் மீன் குஞ்சுகள் வளரும் எனவும் திரு ஜீவா அவர்கள் கூறுகிறார்.

விரால் மீன் குஞ்சுகள் வளர்ந்து ஒரு வருடத்திற்கு பிறகு முட்டையிடும் எனவும், தாய் விரால் மீன்களுக்கு திலேப்பியா மீன்களின் குஞ்சுகளை உணவுகளாக இவர் அளித்து வருவதாகவும், இதனால் தாய் விரால் மீன்கள் நல்ல முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு இவர் இயற்கையான முறையிலேயே விரால் மீன்களுக்கு தீவனத்தை அளித்து வருவதாகவும், மற்ற செயற்கை தீவனங்கள் எதையும் இவர் மீன்களுக்கு அளிப்பது இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் திலேபியா மீன் குஞ்சுகளை விரால் மீன்களுக்கு தீவனமாக அளிப்பதால் அவைகள் திலேபியா மீன் குஞ்சுகளை வேட்டையாடி தீவனமாக உண்ணும் எனவும் இந்த முறையில் இவை அவற்றின் தீவனத்தை உண்ணும் போது முட்டைகள் அதிகளவில் இடம் என கூறுகிறார்.

மேலும் இவர் விரால் மீன் குஞ்சுகளுக்கு மண்புழுக்கள்,கோழிக் குடல் மற்றும் முட்டை ஆகிய இயற்கை தீவனத்தையே அளித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

திரு ஜீவா அவர்கள் கருப்பு விரால் மீன் குஞ்சுகளை மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்து வருவதாகவும்,சிவப்பு விரால் மீன் குஞ்சுகளை இவர் அதிக அளவில் விற்பனைக்கு அளிப்பது இல்லை எனவும் கூறுகிறார்.

ஏனெனில் சிவப்பு விரால் மீன் குஞ்சுகளை வாங்கி சென்று வளர்ப்பது மிகவும் கடினமான முறை எனவும் இதனால் இவர் சிவப்பு விரால் மீன் குஞ்சுகளை அதிக அளவில் விற்பனை செய்வதில்லை எனவும், விருப்பப்பட்டு கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இவர் சிவப்பு விரால் மீன் குஞ்சுகளை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

ஒரு ஜோடி விரால் மீனிலிருந்து இவருக்கு 5 ஆயிரத்திலிருந்து 6000 விரால் குஞ்சுகள் கிடைத்துள்ளதாகவும்,ஒரு விரால் மீன் குஞ்சு பத்து ரூபாய் என்ற விலைக்கு இவர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய விரால் மீன் வளர்ப்பின் மூலம் மாதத்திற்கு 15000 விரால் மீன் குஞ்சுகள் கிடைப்பதாகவும்,இதனை இவர் விற்பனை செய்வதன் மூலம் இவருக்கு அதிக அளவில் லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

திரு ஜீவா அவர்கள் அருமையான முறையில் இயற்கையாக விரால் மீன் குஞ்சுகளை வளர்த்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:கோவைக்காய் உற்பத்தியில் அதிக லாபம்.

Leave a Reply