ஒருங்கிணைந்த பண்ணையின் மூலம் நல்ல வருமானம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருதாச்சலம் தாலுகாவில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு பரமசிவம் என்பவர் ஒருங்கிணைந்த பண்ணை ஆரம்பித்தும்அவற்றில் பல்வேறு கால்நடைகளும் பறவைகளும் வளர்த்து பல்வேறு வருமானம் ஈட்டுகிறார். அவற்றைப்பற்றி இத்தொகுப்பில் ஒரு கட்டுரையாக காணலாம்.

பரமசிவம் அவர்களின் வாழ்க்கை தொடக்கம்

திரு பரமசிவம் அவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விருதாச்சலம் தாலுக்காவில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றி வந்தார். அப்படியே காலங்கள் கடந்து அவர் 60 வயதில் பணி ஓய்வு பெற்றார்.

அதன் பின்பு அவருக்கு ஆறு மாதமாக பணி ஓய்வு ஊதியம் வரத் தொடங்கியது. அவருக்கு நடத்துனராக பணியாற்றும்போது விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதன்பின்பு விவசாயத்திற்கு பல்வேறு முயற்சிகளைச் செய்தார்.

ஒரு விவசாயி சார்ந்த போராட்டங்களில் மற்றும் விவசாயத்திற்கு உதவும் வகையில் இவ்விரு முயற்சிகளை செய்து வந்துள்ளார். இவ்வாறு செய்து வந்த பரமசிவம் அவர்கள் தனது நடத்துநர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்தார்.

திரு பரமசிவம் அவர்களுக்கு சொந்தமாக 5 ஏக்கர் விவசாய நிலமானது இருந்தது. திரு பரமசிவம் அவர்கள் திருமணமாகி குழந்தை இல்லாதவர். ஆனால் இவர் மற்றும் அவரின் மனைவி மட்டுமே இருந்தனர்.

திரு பரமசிவம் அவர்களின் 5 ஏக்கர் நிலமானத நன்கு தண்ணீர் பாயும் விவசாய பூமியாகவும். அந்த 5 ஏக்கர் நிலம் ஆனது முழுவதும் செம்மண் நிலம் ஆகும். அந்த நிலத்தில் எந்த பயிரும் நன்றாக வளர நேரிடும்.

அதன்பின்பு அவர் தமிழக அரசு போக்குவரத்து கழகம் துறையில் நடத்துனர் பணியில் இருந்து ஓய்வு பெற்றதற்காக மாதமாதம் அவருக்கு ஓய்வுதியம் கிடைத்து வந்தது. அந்த பணத்தை வைத்து விவசாயம் செய்யலாம் என எண்ணினார்.

அது மட்டுமல்லாமல் அவருக்கு கால்நடை மற்றும் பறவைகளின் மீது அதிக பேரின்பும் ஆசையும் இருந்தது. விவசாயம் செய்வதோடு மட்டுமல்லாமல் நாம் கால்நடைகள் மற்றும் பறவைகளை வளர்க்கலாம் என எண்ணினார். அதன் பின்பு விவசாயத்துடன் ஒரு ஒருங்கிணைந்த பண்ணையை தொடங்கினார்.

விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையும்

திரு பரமசிவம் அவர்கள் முதலில் விவசாயத்திற்கு தேவையான முயற்சிகளை எடுத்தார். காடுகளில் உழவு ஒட்டி பல்வேறு பயிர்களை வைத்தார். நன்றாக வளர நல்ல தண்ணீர் வசதி உள்ளதால் அவற்றுக்குத் தேவையான உரம் இடுவதால் பயிர்கள் நன்றாக வளர ஆரம்பித்தது.

அதன் பின்பு பயிர்களுக்கு அதிகமாக ஹைபிரிட் உரங்கள் போடாமல் இயற்கையான மாட்டுச் சாணம் உரம் மற்றும் எருது உரம் மண்புழு உரம் போன்றவற்றை போட்டதால் வயலில் நன்கு வளர்ந்து பசுமை வயலாக காணப்பட்டது.

அது அறுவடைக்கு வரும் நிலைமயில் மிக கனமழை பெய்ததால் பயிர்கள் பல்வேறு பாதிப்புக்கு உள்ளானது. காற்று மற்றும் மழை அதிகமாக வீசியதால் பயிர்கள் சாய்ந்த நிலையில் இளம் வேர்களில் மண் அரிப்பு ஏற்பட்டதாலும் பயிர்கள் பல்வேறு பாதிப்பு ஏற்பட்டன.

அறுவடைக்கு வந்த நிலைமையில் பயிர்கள் இவ்வாறு ஆகிவிட்டது என்று மிகவும் மனவருத்தம் அடைந்தார்.

அதன்பின்பு ஒரு ஒருங்கிணைந்த பண்ணையை தொடங்கலாம் என்று எண்ணினார். அதற்கு முதலில் அவற்றுக்கு தேவையான கால்நடைகள் மற்றும் பறவைகளை வாங்கினார். அவற்றைப் பராமரிக்க உதவும் வகையில் ஒரு பண்ணையையும் தொடங்கினார்.

அவ்வாறு பண்ணையை சரிசெய்த  பின்னர் அவற்றுக்குத் தேவையான கால்நடைகள் மற்றும் பறவைகள் வாங்கத் தொடங்கினார். கால்நடை மற்றும் பறவைகள் வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் அந்த ஒருங்கிணைந்த பண்ணையில் மீன்களையும் வளர்க்க நினைத்தார்.

அதற்குத் தேவையான உருமீன் தொட்டியையும் அவற்றில் தண்ணீர் நிரப்பும் முறையையும் தண்ணீரை மறுசுழற்சி செய்யும் முறையையும் மறுசுழற்சி  செய்யப்பட்ட தண்ணீரை பயிர்களுக்கு மாற்றம் நிலையிலும் வடிவமைத்தார்.

அதன்பின் கால்நடைகளை வாங்க ஆரம்பித்தார். கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் இழைகளை தோட்டங்களில் விளைய வைத்தார்.

கால்நடைகள் மற்றும் பறவைகளின் வகைகள்

ஒருங்கிணைந்த கால்நடைகளில் மாடு ஆடு பன்றி குதிரை கழுதை போன்றவற்றை வளர்க்கிறார். இவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் வளர்க்கப்பட்டு சுதந்திரமாக இருக்கிறது.

இவற்றிற்கு தேவையான தீவனங்கள் அவருடைய காட்டிலேயே விளையும் பயிர்களை தீவனமாக தருகிறார். இதனால் பால் கறக்கும் மாடுகள் நன்றாக சத்து நிறைந்த பாலாக கறக்கிறது.

முதலில் அனைத்திலும் இரண்டு என வாங்கியவர் பின்பே அவற்றின் மூலம் வரும் வருமானத்திலிருந்து மேலும் கால்நடைகளை வாங்கத் தொடங்கினார். மாடுகளிலிருந்து பால் மற்றும் சாண உரம் கிடைக்கிறது. மாட்டுச்சாணம் ஆனது நன்கு மக்க செய்து பின் அவற்றை மண்புழு உரமாக மாற்றி காடுகளுக்கு இயற்கையான சத்து நிறைந்த உரமாக அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் காடுகளுக்கு எளிதான முறையில் இயற்கை சார்ந்த உரங்கள் போடுவதால் மண் மிகுந்த சத்து நிறைந்தும் பயிர்கள் வளர ஏற்றவாறு பக்குவப்படுத்திக் கொள்ளப்படுகிறது. அதன்பின்பு மாடுகளிலிருந்து கிடைக்கப்படும் பாலானது அவற்றை பராமரிக்க ஏற்படும் செலவிற்கு பயன்படுகிறது.

மாடுகளிலிருந்து வரும் லாபமானது பெரிதளவு இல்லாவிட்டாலும் கழுதைகளில் இருந்து வரும் லாபமானது அதிகமாகும். ஒரு பெரிய அளவு கழுதையானது சுமார் 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. குட்டிக் கழுதை யானது 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

மாட்டுப் பாலை விட கழுதைப் பாலில் அதிக புரதச்சத்து சத்து நிறைந்த பல வைட்டமின்களும் இருப்பதால் அவை மாட்டுப் பாலை விட மூன்று மடங்கு விலை உயர்ந்ததாக இருக்கிறது. சுமார் ஒரு லிட்டர் கழுதையின் பால் 130 முதல் 140 வரை விற்கப்படுகிறது. கழுதையின் பாலானது மிக எளிதில் கிடைக்காது. அவை பெரும்பாலான இடங்களில் மட்டுமே கிடைக்கும்.

குதிரைகள், குதிரைகளில் லாபம் இல்லாவிட்டாலும் அவை சவாரி செய்வதற்குப் அழகிற்காகவும் வளர்க்கப்படுகிறது. குதிரைகளிலும் வருடம் ஒரு முறை லாபம் காண்கிறார். அவரிடம் இரண்டு பெண் குதிரைகள் மற்றும் ஒரு ஆண் குதிரை உள்ளன. அது வருடம் ஒருமுறை இனச்சேர்க்கைக்கு பின்பு குட்டிகளை ஈன்ற பின்பு அவை பக்குவ நிலைக்கு வந்த பின் அவற்றை விற்கிறார்.

குதிரைகளை வளர்த்து விற்பதன் மூலம் பெருமளவு லாபம் இல்லாவிட்டாலும் வருடத்திற்கு 20,000 முதல் 40,000 வரை லாபகம் காண்கிறார்.

பன்றிகள், பன்றிகளில் போதுமான அளவு லாபம் கிடைக்கிறது. அவர்களிடம் பன்றிகள் இரண்டு வேறுவிதமாக உள்ளது. வெள்ளைப் பன்றிகள் மற்றும் கருப்பு புள்ளிகள் என உள்ளன. அதுமட்டுமல்லாமல் திரு பரமசிவம் அவர்களிடம் நாட்டு பணிகளும் உள்ளன.

அவர் ஆரம்ப நிலையில் 25 கிலோ அளவிலான பன்றிகளை வாங்கி அவற்றை வளர்த்து இனச்சேர்க்கைக்கு பயன்படுத்தி அவற்றில் வரும் குட்டிகளை வளர்ப்பதற்கு எடுத்துக் கொண்டு மீதியுள்ள பன்றிகளை விற்கிறார்.

பன்றிகள் 25 கிலோ எடையிலிருந்து 80 கிலோ எடை வரை வளர்க்கப்படுகின்றன. பின்னர் அவர் வளர்க்கப்பட்ட பன்றிகளை மொத்த விலைக்கு விற்கிறார். பரமசிவம் அவர்களிடம் இருந்து பன்றிகளை வாங்கும் சில்லறை விற்பனையாளர் மற்றும் கரி கடைக்காரர்கள் ஒரு கிலோ 150 என்ற மதிப்பிற்கு வாங்கிச் செல்கிறார்கள்.

ஆனால் அவர்கள் அங்கு கடத்திக் கொண்டு சென்று அவற்றை விற்கும்போது ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் கடைக்காரருக்கு மிகவும் லாபம் கிடைக்கிறது.

ஆனால் அவற்றை வளர்த்து பராமரித்து அவற்றுக்குத் தேவையான உணவை சரியான நேரத்தில் கொடுத்து பக்குவ நிலைக்கு கொண்டு வரும் பண்ணை உரிமையாளருக்கு மிக குறைந்த லாபமே கிடைக்கிறது. இதனை தெரிந்து கொண்ட திரு பரமசிவம் அவர்கள் நாமே நேரடியாக பன்றி இறைச்சிகளை விற்கலாம் என்று முடிவு செய்தார்.

அதற்கு தேவையான முயற்சிகளை செய்து கொண்டு வருகிறார். அதன் பின்பு சிறிது காலம் முடிந்தவுடன் அவர் சொந்தமாக ஒரு பன்றி இறைச்சி கடையை தொடங்கலாம் என முடிவெடுத்தார். இவ்வாறு கால்நடைகள் மூலம் ஒரு அளவு லாபம் கிடைக்கிறது.

திரு பரமசிவம் அவர்களிடம் பறவைகளின் வகைகள் பல்வேறு உள்ளன. அவர்களிடம் நாட்டுக்கோழி கடக்னத் கின்னி கழி சிறுவிடை கோழி மற்றும் முட்டை கோழி பிராய்லர் கோழி போன்றவைகள் உள்ளன.

இவற்றிற்கு தேவையான இறைகளை பன்றிகள் சாப்பிட்டு போடும் கழிவுகளை  அரைத்து அவற்றை கோழிகளுக்கு இறைகளாக பயன்படுத்துகிறார். மேலும் அருகிலுள்ள உழவர் சந்தைக்குச் சென்று அங்கு மீதமுள்ள காய்கறிகள் கீரைகள் பழவகைகள் மீதமானவையை எடுத்து வந்து கோழிகளுக்கு இறைகளாக போடுகிறார்.

இவ்வாறு செய்வதன் மூலம் இவற்றிற்கு இறைகளுக்கு என தனியாக எந்த செலவும் ஆகுவது இல்லை. இவற்றின் மூலம் பல்வேறு செலவுகள் குறைகின்றன.

இந்த பறவைகளின் மூலம் போதிய அளவு லாபம் கிடைக்கிறது. ஒரு கிலோ நாட்டுக் கோழியின் கரியானது சுமார் 450 முதல் 550 வரை விற்கிறார். மேலும் கின்னிக்கோழி அசில் கடகநாத் போன்ற கோழிகளை 350 முதல் 450 வரை விற்கிறார்கள்.

மேலும் வான்கோழிகள் வாத்து போன்றவற்றை கிலோ 450 முதல் 500 வரை விற்று வருகிறார். இவ்வாறு பறவைகளின் மூலம் மாதம் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகிறார். அவற்றிற்கு தேவையான பராமரிப்பு செலவுகள் போக மாதம் 12,000 முதல் 15,000 வரை மனித படுத்துகிறார்.

மீன் வளர்ப்பும் அவற்றின் பராமரிப்பும்

ஒருங்கிணைந்த பண்ணையில் கால்நடைகள் மற்றும் பறவைகள் வளர்ப்பது அல்லாமல் மீன்களையும் வளர்க்கத் தொடங்கினார். அதற்கு தேவையான மீன் வளர்ப்பு தொட்டிய தயார் செய்து மீன்களையும் வளர்த்தார்.

அத் தொட்டியினுள் தினமும் தண்ணீரை மாற்றி மீன்களை சுத்தமான முறையில் வளர்த்தார். தொட்டியில் தண்ணீரை மாற்றுவதற்கு மறுசுழற்சி முறையை பயன்படுத்தினார். மாற்றப்படும் தண்ணீரானது காடுகளுக்கு சத்து நிறைந்த நீராக அனுப்பப்படுகிறது.

திரு பரமசிவம் அவர்கள் மீன்களுக்கு தேவையான இறைகளை தன் கோழிகள் உண்டு விட்டு போடும் எச்சங்களை மீன்களுக்கு இறைகளாக பயன் படுத்துகிறார். அதுமட்டுமில்லாமல் கடைகளிலும் மீன் தீவனங்களை வாங்கி பயன்படுத்துகிறார்.

இவ்வாறு செய்வதன் மூலம் குறைந்த செலவே ஆகிறது. திரு பரமசிவம் அவர்கள் இரண்டு வகையான மீன்கள் மட்டுமே வளர்க்கிறார் . கெளுத்தி மற்றும் ஜிலேபி போன்ற மீன் வகைகளை மட்டுமே வளர்க்கிறார்.

இவ்வாறு வளர்க்கப்பட்ட மீன்களை மொத்த விற்பனைக்கும் சில்லறை விற்பனைக்கும் விற்கிறார்.

ஒருங்கிணைந்த பண்ணையும் லாபமும்

இவர் கால்நடைகள் மற்றும் பறவைகள் மீன்களின் மூலம் பல்வேறு லாபம் காண்கிறார் பரமசிவம் அவர்கள்.

கால்நடைகளின் மூலம் வருடத்திற்கு மூன்று லட்சம் வரை வருமானம் காண்கிறார். மேலும் பறவைகள் மற்றும் மீன்கள் வளர்ப்பதன் மூலம் வருடத்திற்கு ஒரு ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் லாபம் காண்கிறார். ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் பல்வேறு லாபங்களை காண்கிறார். அவ்வாறு கணக்கிட்டு பார்த்தால் இவருக்கு மாதம் 40 ஆயிரம் முதல் வருமானம் கிடைக்கிறது.

மேலும் படிக்க:கோழி வளர்த்தால் லட்சங்களில் வருமானம்

 

Leave a Reply