பீர்க்கங்காய் சாகுபடியில் அதிக லாபம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பீர்க்கங்காய் சாகுபடியை செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய பீர்க்கங்காய் சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

பீர்க்கங்காய் சாகுபடியின் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பீர்க்கங்காய் சாகுபடியை செய்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம் எனவும் இவர் சிறு வயதிலிருந்தே விவசாயம் செய்து வந்ததாகவும் விவசாயத்தின் மீது இவருக்கு அதிக அளவில் ஆர்வம் இருந்ததாகவும் கூறுகிறார்.

இவர் தக்காளி, மற்றும் பிற காய்கறி வகைகளை சாகுபடி செய்து வந்ததாகவும், பீர்க்கங்காய் சாகுபடி செய்யலாம் என்ற ஆர்வத்தில் இவர் பீர்க்கங்காய் சாகுபடியை தொடங்கி இப்பொழுது சிறப்பாக செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த பீர்க்கங்காய் சாகுபடியை 20 வருடத்திற்கு முன்பு ஒருமுறை செய்ததாகவும், அதன் பிறகு இப்பொழுதுதான் இவர் இந்த பீர்க்கங்காய் சாகுபடியை செய்ய தொடங்கியதாகவும், தற்போது இவர் பீர்க்கங்காய் சாகுபடியை மிகச்சிறப்பான முறையில் சாகுபடி செய்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

Method of cultivation of luffa

பீர்க்கங்காய் சாகுபடி முறையை பற்றி இவருக்கு மிகவும் நன்றாக தெரியும் எனவும் அந்த முறையை பின்பற்றி இவர் மிகச் சிறப்பான முறையில் பீர்க்கங்காய் சாகுபடியை செய்து வருவதாக கூறுகிறார்.

பீர்க்கங்காயை பந்தல் முறையில் செய்தால் மட்டுமே சிறப்பான விளைச்சலை அளிக்கும் எனவும் தரையிலோ அல்லது வேலியின் மீது செய்தால் பீர்க்கங்காயின் விளைச்சல் சிறப்பாக இருக்காது எனவும் கூறுகிறார்.

பீர்க்கங்காய் விதைகளை நிலத்தில் விதைப்பதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இயற்கை உரமான மாட்டுச் சாணம் போன்றவற்றை மண்ணில்  போட்டு நன்றாக நிலத்தினை உழுது பதப்படுத்தி வைத்துக் கொண்டு அதன் பிறகு நிலத்தில் விதைகளை விதைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

ஒவ்வொரு செடிகளுக்கு இடையிலும் பத்து அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும், இல்லையெனில் அவரவரின் தேவைக்கு ஏற்ப இரண்டு அடியில் இருந்து 10 அடி வரை எந்த அடி இடைவெளியிலும் விதைகளை நடலாம் என கூறுகிறார்.

மேலும் பீர்க்கங்காய் சாகுபடியை பொறுத்தவரையில் அதனை பந்தல் முறையில் வளர்த்தால் மட்டுமே சிறப்பாக வளரும் எனவும், விதைகளை நட்ட பிறகு கொடி வளரும் எனவும், இவ்வாறு வளர்ந்த கொடியினை சுற்றிலும் பந்தல் அமைத்து அந்த பந்தலின் மீது கொடியினை ஏற்றி விட வேண்டும் எனக் கூறுகிறார்.

நீரினை அளிக்கும் முறை மற்றும் பராமரிப்பு முறை

பீர்க்கங்காய் சாகுபடியில் பீர்க்கங்காய் கொடிகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை நீரினை அளிக்க வேண்டும் எனவும், இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செடிகளுக்கு நீரினை அளித்தால் மட்டுமே காய்கள் அதிகளவில் விளைச்சல் ஆகும் எனக் கூறுகிறார்.

பீர்க்கங்காய் கொடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு அனைத்து நீர்ப்பாசன முறையையும் பயன்படுத்தலாம் எனவும், இவர் இவருடைய தோட்டத்திற்கு சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் பீர்க்கங்காய்களை உண்பதற்கு பறவைகள் மற்றும் விலங்குகள் காட்டிற்கு  வரும் எனவும் அவற்றிடம் இருந்து தோட்டத்தைக் மிகுந்த பராமரிப்புடன் பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் பீர்க்கங்காய்களில் நோய் தாக்குதல் ஏற்படும் எனவும் அதனை சரி செய்வதற்கு கடைகளில் விற்பனையாகும் மருந்துகளை வாங்கி வந்து அளிக்க வேண்டும் எனவும் இல்லை எனில் அந்த நோய் அனைத்து காய்களையும் தாக்கி விடும் என கூறுகிறார்.

இவ்வாறு கொடிகளை எந்த வித நோய்களும் தாக்காமல் மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வந்தால் அதிக அளவு விளைச்சல் பீர்க்கங்காய் சாகுபடியின் மூலம் எடுக்க முடியும் என கூறுகிறார்.

மேலும் இந்த பீர்க்கங்காய் சாகுபடியை இவர் அதிக அளவில் இயற்கை உரங்களையும் மற்றும் மருந்துகளையும் செடிகளுக்கு அளித்து வருவதாகவும் அதிக அளவில் எந்த வித செயற்கை மருந்துகளையும் இவர் பயன்படுத்துவதில்லை எனவும் கூறுகிறார்.

மேலும் விதை நட்ட பத்தாவது நாளில் இருந்து பதினைந்தாவது நாளில் அளிக்கும் உரத்தினையும் மற்றும் 15வது நாளில் இருந்து 20 நாள் வரை கொடுக்கும் உரத்தினையும் சரியான முறையில் அளித்து பராமரித்து வந்தால் பீர்க்கங்காய் மிகச் சிறப்பான முறையில் வளர்ந்து அதிகளவில் விளைச்சல் தரும் என கூறுகிறார்.

Harvesting method

பீர்க்கங்காய் விதைகளை நட்ட ஒரு வாரத்திலேயே செடிகள் முளைத்து விடும் எனவும் இவ்வாறு முளைத்த செடிகள் 40வது நாளில் காய்கள் காய்க்க ஆரம்பம் செய்து விடும் என கூறுகிறார்.

இவ்வாறு 40வது நாளில் காய்கள் காய்த்த தொடங்கியதிலிருந்து தொடர்ந்து 60 நாட்கள் வரை கொடியிலிருந்து பீர்க்கங்காய்களை அறுவடை செய்யலாம் எனவும், கொடியினை மிகச் சிறப்பான முறையில் பராமரித்து இருந்தால் 60 நாட்களுக்கு மேல் 20 நாட்கள் விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார்.

அனைத்து பருவ நிலையிலும் பீர்க்கங்காய் சாகுபடி செய்ய முடியும் எனவும், வெப்பமும் குளிரும் சமநிலையாக இருக்கும் இடத்தில் பீர்க்கங்காய் சிறப்பான முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

50 செண்ட் பரப்பளவில் செய்யப்பட்டுள்ள பீர்க்கங்காய் சாகுபடியிலிருந்து 5 டன் அளவிற்கு பீர்க்கங்காய்களை இவர் அறுவடை செய்து வருவதாகவும், சிறந்த முறையில் விளைச்சல் கிடைக்க வேண்டுமென்றால் பராமரிப்பு முறை சிறப்பாக இருக்க வேண்டும் என கூறுகிறார்.

மேலும் இந்த பீர்க்கங்காய் சாகுபடியை அனைவரும் மிக சிறப்பான முறையில் செய்ய முடியும் எனவும், இந்த பீர்க்கங்காய் சாகுபடியில் எந்தவித பாதிப்பும் அதிக அளவில் இருக்காது எனவும் இதன் மூலம் சிறந்த லாபத்தை பெற முடியும் எனவும் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

பீர்க்கங்காய்களை மிகச் சிறப்பான முறையில் சாகுபடி செய்து அதனை இவருடைய ஊரில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்து வருவதாகவும், மற்றும் பீர்க்கங்காய் குறைந்த அளவில் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கும் இவர் பீர்க்கங்காய்களை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் ஒரு கிலோ பீர்க்கங்காயை 15 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாகவும், ஒரு சில சமயங்களில் காய்கறி விலை அதிகரிக்கும் எனவும் அதுவே சில சமயங்களில் காய்கறியின் விலை மிக குறைவாக விற்பனை ஆகும் எனவும் கூறுகிறார்.

மேலும் பீர்க்கங்காய்களை சந்தைகளில் எடுத்துச் சென்று விற்பனை செய்யும் போது காய்கள் உடையாமல் கவனமாக எடுத்துச் சென்று விற்பனை செய்ய வேண்டும் என கூறுகிறார்.

மேலும் இவர் மிக சிறப்பான முறையில் இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்தி பீர்க்கங்காய்களை உற்பத்தி செய்து வருவதால் அதிகளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து பீர்க்கங்காய்களை வாங்கி செல்வதாகவும் இதனால் இவருக்கு  சிறந்த லாபம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த பீர்க்கங்காய் சாகுபடியை மிகச் சிறப்பான முறையில் செயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி செய்து வருவதாகவும், இம்முறையினால் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:அரளி பூ சாகுபடியில் நிறைந்த வருமானம்.

Leave a Reply