கோழி வளர்த்தால் லட்சங்களில் வருமானம்

நாகர்கோவிலைச் சேர்ந்த திரு முருகன் அவர்கள் கோழிப் பண்ணையை தொடங்கி அவற்றின் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார். அவரையும் அவரின் கோழி பண்ணையையும் இத்தொகுப்பில் ஒரு கட்டுரையாக காணலாம்.

திரு முருகன் அவர்களின் வாழ்க்கை

திரு முருகன் அவர்களின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார்.அவர் நாகர்கோவிலில் பல்வேறு வீடுகளை கட்டி அவற்றை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை கொண்டும் அவர் குடும்பத்தையும் நடித்தி அவர் தொழிலையும் மேம்படுத்தி வந்துள்ளார்.

திரு முருகன் அவர்கள் அங்குள்ள கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து பின்பு ஒரு தனியார் துறைக்கு வேலைக்கு சென்று வந்தார். அதன்பின் ஒரு 8 மாத காலம் மட்டுமே அந்த தனியார் துறைக்கு வேலைக்குச் சென்றார். அதன்பின் அந்த தனியார் நிறுவனம் ஆனது போதிய சான்றிதழ்கள் இல்லாத காரணத்தில் இயங்குவதால் அதற்கு அரசு தடை விதித்தது.

இதனால் முருகன் அவர்களுக்கு வேலை நிறுத்தம் ஏற்பட்டது. போதிய நாட்களில் வேலையும் இல்லாமல் போனது. அதன்பின் வீட்டிலேயே இருந்த திரு முருகன் அவர்களைப் பார்த்த அவரின் பெற்றோர் முற்றிலும் கவலைப்பட்டனர்.

திரு முருகன் அவர்களின் நிலையை பார்த்த அவருடைய தந்தை திரு முருகன் அவருக்கு ஏதாவது ஒரு வேலையை தயார் செய்து தர வேண்டும் என்று எண்ணி பல்வேறு இடங்களில் வேலைக்கு கேட்டுப் பார்த்தனர்.

பின்னர் அவர் தேடியபடி வேலை எங்கும் கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்தாலும் அவர் படித்ததற்கு தகுந்த வேலையாக இல்லாமல் இருந்தது. மேலும் மிகக் குறைந்த சம்பளத்திற்கு அதிக  வேலையாக இருந்து. அதன்பின் தந்தையின் வேலையை பார்க்கும் விதத்தில் அமைந்தது.

தந்தையின் வேலை

திரு முருகன் அவர்கள் எந்த வேலையும் இல்லாமல் இரண்டு மாத காலமாக வீட்டிலேயே இருந்தார். பின்பு அவர் பல்வேறு இடங்களில் அவர் படித்ததற்கான வேலையை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு அதில் பலனில்லை.

அதன் பின்பு திரு முருகன் அவர்களின் தந்தை அவரிடம் பேச தொடங்கினார். அப்பொழுது நீ என்னுடன் வேலைக்கு வந்து எனக்கு உதவியாக இருந்து என்று கூறினார். எந்த வேலையும் இல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் மனமுடைந்த திரு முருகன் அவர்கள் தனது தந்தையுடன் வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.

நாகர்கோவிலில் திரு முருகன் அவர்களின் தந்தை பல்வேறு வீடுகளை கட்டி மற்றும் அடுக்கு மாடிகைகளை கட்டி அவற்றை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானங்களை வட்டிக்கு விடும் தொழிலை பயன்படுத்தினார்.

அங்கு திரு முருகன் அவர்களுக்கு தந்தையுடன் வேலை சரியாக இருந்தது. காலையில் எழுந்து அவருடைய பைனான்ஸ் கடைக்கு சென்று விடுவார். பின்பு அங்கு கணக்கு வழக்குகளை முடித்த பின் பணம் வசூல் செய்ய சென்று விடுவார்.

பின்பு மதிய உணவு இடைவேளையில் வீட்டிற்கு வந்து மறுபடியும் வேலை தேட முயற்சி செய்தார். இன்னும் இடைவெளியில் பல்வேறு விளம்பரங்களையும் பல்வேறு நிறுவனங்களிலும் தன்னுடைய பொறியியல் பட்ட படிப்பை பயன்படுத்தி வேலையைத் தேடிக் கொண்டே இருந்தார்.

இதுபோன்று ஆறு மாத காலம் முடிவடைந்தது. அவரின் தந்தைக்கும் நல்ல வேலையாக அமைந்தது. மூலம் மாதம் ஒரு லட்சம் வரை கிடைத்தது அவருக்கு. பைனான்ஸ் மற்றும் அடுக்குமாடி கட்டடங்களில் மூலம் வரும் வருமானம் ஆனது ஒரு லட்சமாக இருந்தது.

இதில் அவருடைய செலவு போக மீதம் 90,000 இருந்தது. ஒரு பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞருக்கு இந்த வருமானமானது புதிதாக இருந்தது. இதற்குப் பின் நான் தொழிலை சரியாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருடைய தந்தைக்கு வந்தது.

அவர் நினைத்துக்கொண்டிருந்த நிலைமையில் முருகனுக்கு பல்வேறு யோசனைகள் ஏற்பட்டது. என்ன இருந்தாலும் நாம் தந்தையைப் பின்பற்றி முன்னேறி விட்டோம் என்று எண்ணிவிடக்கடாது என நினைத்தார்.

எதா இருந்தாலும் சமாளித்து நான் தனியாக சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்று எண்ணினார். நன்றாக போய்க் கொண்டிருந்த அவருடைய தந்தையின் வேலைக்கு திடீரென ஒருநாள் நான் வரவில்லை என்று கூறினார்.

அதைக்கேட்ட அவரின் தந்தை மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இவ்வளவு நாள் சரியாகத்தான் வந்துகொண்டிருந்தாய் திடீரென உனக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார். அதற்கு பின் திரு முருகன் அவர்கள் அவருடைய கூறினார். அதைக்கேட்ட அவரின் தந்தை அதெல்லாம் வேண்டாம் எனக்கூறி புறக்கணித்தார்.

முருகனின் சுயதொழில்

அவர் தந்தை சொல்வதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் முதலில் ஒரு காய்கறி தோட்டத்தை தொடங்கலாம் என எண்ணினார். அதன்பின்பு அவர் மாடியில் உள்ள இடத்தை வைத்து குறைந்த அளவு காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்தார்.

அந்த காய்கறிகளுக்கு தேவையான உரங்களை கடைகளில் இருந்து வாங்கி அந்த காய்கறிச் செடிகளுக்கு போட்டார். இதனால் அந்த காய்கறிகள் நன்கு வளர ஆரம்பித்தன. பின்பு வளரவளர மண் சத்து குறைய ஆரம்பித்து மலடாக மாறின. இதனால் நன்கு வளர்ந்த காய்கறிகளும் பாடத் தொடங்கினார்.

மேலும் இதனை தடுக்க பல்வேறு புத்தகங்களையும் இணையதளத்தின் வாயிலாக படிக்க தொடங்கினார். அதனைப் பற்றி படிக்க படிக்க தெரிந்து கொண்ட திரு முருகன் அவர்கள் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் அதிக அளவு சத்து நிறைந்த உணவாக கிடைக்கும் என எண்ணினார்.

அதன்பின் செடிகளுக்கு மண்புழு உரம் தயார் செய்ய ஆரம்பித்தார். பின்பு ஆற்றுடன் மாடியில் வளர்க்கும் அளவிற்கு கோழிகள் கொஞ்சம் வாங்கினார் . அதன்பின் அவர் தயார் செய்த மண்புழு உரங்களுடன் கோழிகள் போடும் எச்சங்களை கலந்து நன்கு மக்கச் செய்து அவற்றை உரமாக்கி காய்கறிச் செடிகளுக்கு உரமாக போட்டார்.

அதன்பின் காய்கறிகள் நன்றாக வளர ஆரம்பித்தன. அவர்களின் வீட்டிற்கு தேவையான அளவிற்கு மட்டுமே காய்கறிகள்  கிடைத்தன. இதனால் பெருமளவு லாபம் கிடைக்கவில்லை.

அதன் பின்பு ஒரு மூன்று மாத காலம் கடந்தது இவ்வாறு செய்து பல்வேறு காய்கறி வளர்ப்பு கலை தொடங்கினார். அதற்கான ஆண்களையும் தயார் செய்ய முடிவு செய்து மேலும் கொஞ்சம் கோழிகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினார்.

அதில் வீட்டின் தேவைக்கு போக மீதமிருக்கும் காய்கறிகளை வெட்ட தொடங்கினார். அதில் அவருக்கு சிறிதளவு லாபம் கிடைத்தது. நாட்கள் அதிகமாக கோழிகள் வளர ஆரம்பித்தன. பின்னர் அவற்றை விற்கலாம் என்று எண்ணிய போது அவரிடமிருந்த 12 கோழிகளை சுமார் 15 ஆயிரத்துக்கு விற்றார். அப்பொழுதுதான் அவருக்கு தெரியவந்தது பண்ணை வளர்ப்பு நல்ல வருமானம் கிடைக்கும் என நம்பினார். அதன்பின் ஒரு கோழி பண்ணையை தொடங்க வேண்டும் என முடிவு செய்தார்.

கோழி பண்ணையின் தொடக்கம்

கோழி பணியை தொடங்க அவர் வீட்டுக்குப் பின்னால் இருந்த நிலத்தில் ஒரு சாலையை போட்டு தொடங்கினார். ஆரம்பத்தில் சுமார் 100 கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினார். பின்னர் அவைகளுக்கு வழக்கம்போல் மண்புழுக்களை உணவாக போட்டார்.

மேலும் அவர்களுக்கு தேவையான உணவுகளை பல்வேறு இடங்களில் இருந்து வாங்கினார். இதன் மூலம் கோழிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. கோழிகளுக்கு நன்கு செரிமானம் ஆகாமல் இறக்கத் தொடங்கின. இதனால் பெருமளவு கோழிகள் இறந்து விட்டன.

கோழிகளில் அதுமட்டுமல்லாமல் பல்வேறு பறவை காய்ச்சல் போன்றவை தாக்கி மீதமுள்ள கோழிகளும் இறந்ததால் அதனால் அவருக்கு முதலிலே 20,000 வரை நஷ்டம் அடைந்தது.

வளர்ப்பும் பராமரிப்பும்

கோழிகள் இறந்தபின்னர் வருத்தமடைந்த திரு முருகன் அவர்கள் அவற்றை அப்படியே விடாமல் மீண்டும் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யலாம் என்று எண்ணினார்.

அதற்காக பல்வேறு பண்ணையாளர்கள் இடம் சென்று அவர்களிடம் ஆலோசனை கேட்கும் மேலும் அதைப்பற்றி படிக்கவும் தொடங்கினார். பல்வேறு ஆலோசனைகளைக் கேட்டுத் தெரிந்து அதோடு மட்டுமல்லாமல் இணையதளத்தின் வாயிலாக பல்வேறு கோழி வளர்ப்புகளை பற்றி படிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு மீண்டும் கோழிகளை வாங்கி வளர்க்க செய்தார். அவ்வாறு வளர்க்கும் போது அவர் படித்த முறையைக் கையாளத் தொடங்கினார்.

பின்பு அனைத்து உணவுகளையும் கடைகளிலிருந்து வாங்காமல் இயற்கையான உணவுகளையும் தர வேண்டும் என எண்ணினார். அதற்கு அருகில் உள்ள சந்தையில் மீதமான கீரைகள் பழங்கள் மற்றும் தானிய வகைகளை எடுத்துக் கொண்டுவந்து அவற்றினை கோழிகளுக்கு இறையாக போட்டார்.

அதன் பின்பு அவற்றை நன்றாக உண்ட பிறகு கோழிகள் ஆரோக்கியமாக வளர ஆரம்பித்தன.

கோழிகளின் வகைகள்

திரு முருகன் அவர்களின் பண்னணையில் பல்வேறு விதமான கோழி ரகங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.

அவர்களிடம் நாட்டுக்கோழி, கடக்நாத், அசில் ,பிராய்லர் ,சிறுவடை ,கேரளா கோழி ,கின்னிக்கோழி ,முட்டை கோழி, வான்கோழி,போன்ற ரகங்களில் கோழிகள் உள்ளது.

இதில் ஒவ்வொரு ரகங்களுக்கும் ஒவ்வொரு மதிப்பு போகும். நாட்டுக் கோழிகள் கிலோ 500 முதல் 600 வரை விற்கப்படுகிறது. கின்னி கோழி முட்டை கோழி கிரிராஜா கோழி போன்ற கூறுகள் கிலோ 400 முதல் 450 வரை விற்கப்படுகிறது. வான்கோழிகள் கிலோ 600 முதல் 700 வரை விற்கப்படுகின்றன.

இவ்வாறு கோழிகள் ஒவ்வொரு மதிப்பிற்கும் விற்கப்படுகின்றது. இவற்றிற்கு தேவையான இறைகளை சந்தையில் இருந்து மட்டும் வாங்குவது இல்லாமல் பல்வேறு இடங்களில் தானியங்களை வாங்கி அவற்றுடன் நியாயவிலைக் கடையில் விற்கும் அரிசி களை வாங்கி இரண்டையும் சரிசமமாக கலந்து அவற்றை அரை பதத்திற்கு அரைத்து அவற்றை கோழிகளுக்கு இறையாக தருகின்றனர்.

மேலும் கோழிகளின் எச்சங்களை நன்கு ஊறவைத்து அதன் பின்பு அவற்றில் உண்டாகும் புழுக்களை உணவாக பயன்படுத்துகின்றன.

இவ்வாறு நன்றாக அரைக்கப்பட்ட உணவினை கோழிகளுக்கு இறையாக தருவதால் கோழிகள் நன்றாக ஆரோக்கியத்துடனும் பெறிதளவாக வளர்கின்றன.

லட்சங்களில் வருமானம் ஈட்டும் முருகன்

அதன் பின்பு நன்கு வளர்ந்த கோழிகளை விற்பதற்கு முடிவு செய்தார். கோழிகளை நேரடி மொத்த விலைக்கே விற்பதன் மூலம் அவருக்கு பெருமளவு லாபம் கிடைக்கவில்லை.

அங்கு அருகிலுள்ள கோழிச் சந்தைக்குச் சென்று கோழிகளை எவ்வாறு விற்பனை செய்வது என்று தெரிந்து கொண்ட அவர் பின்பு கோழிகளை தானே விற்க முடிவு எடுத்தார்.

அதன் பின்பு கோழிகளை மொத்த விலைக்கு தராமல் நேரடியாக அவரே விற்கத் தொடங்கினார். அதன் மூலம் அவருக்கு பெருமளவு லாபம் கிடைத்தது.

இவர் விற்பது வாங்குவது என்ற பண்ணை தொழிலில் ஈடுபட்டதால் அவர் படித்ததற்கு ஏற்றதை விட அதில் வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. இந்த பண்ணை தொழிலில் இருந்து அவருக்கு பெருமளவு லாபம் கிடைத்தது. அவருக்கு மாதம் ஒரு லட்சத்தி 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.

கோழி வளர்ப்பில் லாபம் கிடைக்குமா?

கோழி வளர்ப்பில் லாபம் நிச்சயம்!

கோழிகளை சரியாக பராமரித்து வளர்ப்பதன் மூலம் இத் தொழிலில் பெருமளவு லாபம் கிடைக்கிறது.

மேலும் படிக்க:ஐ டி நிறுவனத்தை விட அதிக வருமானம்

Leave a Reply