பாக்கு சாகுபடியில் லட்சங்களில் வருமானம்.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பாக்கு சாகுபடி செய்து அதன்மூலம் லட்சங்களில் வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.இவரைப் பற்றியும்,இவருடைய பாக்கு சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

பாக்கு சாகுபடியின் தொடக்கம்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பாக்கு சாகுபடியை செய்து அதன் மூலம் லட்சங்களில் வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய சிறுவயதிலிருந்து இவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்து வந்ததன் காரணமாகவும் மற்றும் இவருடைய தந்தை விவசாயி என்ற காரணத்தினாலும் இவர் விவசாயத்தை தொடங்கியதாக கூறுகிறார்.

பாக்கு சாகுபடியை இவர் கடந்த 20 வருடங்களாக செய்து வருவதாகவும் இந்த இருபது வருடத்தில் இவர் பாக்கு சாகுபடியை மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

இவர் பாக்கு சாகுபடியை மட்டும் செய்யாமல் மற்ற அனைத்து தானிய வகைகளையும் இவர் சாகுபடி செய்து வருவதாகவும்,இதன் மூலமும் இவருக்கு சிறந்த லாபம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய பாக்கு சாகுபடியை சிறப்பான முறையில் இயற்கையான வழி முறையை பின்பற்றி செய்து வருவதாகவும் இதன் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

Cultivation method

பாக்கு சாகுபடியை இவர் மிகச் சிறப்பான முறையில் இயற்கை வழி முறையை பின்பற்றி கடந்த 20 வருடங்களாக செய்து வருவதாக கூறுகிறார்.

பாக்கு சாகுபடியை இவர் மூன்று ஏக்கர் நிலத்தில் செய்து வருவதாகவும், ஒரு ஏக்கர் நிலத்தில் 700லிருந்து 800 பாக்கு செடிகள் நடவு செய்ய முடியும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் பாக்கு செடிகளை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருவதாகவும், பாக்கு செடி நாற்றுகளை இவரே உற்பத்தி செய்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

நாற்பதில் இருந்து ஐம்பது வருடம் வளர்ந்துள்ள பாக்கு மரத்தில் இருந்து விதைகளை எடுத்து பதப்படுத்தி வைத்து நாற்றுகளாக உருவாக்கி நாற்றுகள் வளர்ந்த பிறகு அதனை வெயிலில் வைத்து வளர்த்து அதிலிருந்து பாக்கு சாகுபடி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

40லிருந்து 50 வருடம் ஆன பாக்கு மரத்திலிருந்து விதைகளை எடுத்து வளர்த்தால் அதன் மூலம் செடிகள் சிறப்பாக வளரும் எனவும், 50 வருடமாக வளர்ந்துள்ள பாக்கு மரத்தில் உள்ள விதைகள் மிகவும் தரமானதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

50 வருடம் ஆன பாக்கு மரத்தில் இருந்து விதைகளை எடுத்து அதனை சாணி பாலில் கலந்து நிலத்தில் நட வேண்டும் எனவும் முளைப்பு வரும் வரை அந்த செடிக்கு தேவையான அனைத்தையும் சாணி பாலின் மூலம் செய்ய வேண்டும் என கூறுகிறார.

விதையில் இருந்து முளைப்பு வரும் வரை அதனை வெயிலில் வைத்து வளர்க்க வேண்டும் எனவும் ஏனெனில் வெயிலில் வைத்து வளர்த்தால் செடி மிகவும் தரமானதாக அனைத்து சத்துக்களையும் பெற்று வளரும் எனவும் கூறுகிறார்.

ஒரு பாக்கு நாற்றினை 10 அடி ஆழத்தில் நட வேண்டும் எனவும்,  ஒரு பாக்கு செடியின் இடையிலும் 7 அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும் இந்த முறையில் செடியை நட்டு வளர்த்தால் 50 வருடங்கள் வரை பாக்கு மரம் சிறப்பாக வளரும் என கூறுகிறார்.

விதைகளை நிலத்தில் நட்ட எம்பதாவது நாளில் முளைப்பு வந்துவிடும் எனவும் இவ்வாறு முளைப்பு வந்த பிறகு அதனை கவர் போட்டு வளர்த்துவதாகவும், முளைப்பு செடியாக வளர்ந்த பிறகு அதனை விற்பனைக்கு அனுப்பி விடுவதாக கூறுகிறார்.

இந்த முறையில் பாக்கு செடிகளை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருவதாகவும், உற்பத்தி செய்த பாக்கு நாற்றுக்களை இவரும் வளர்த்து வருவதாகவும், இப்பொழுது இவரிடம் 3 ஏக்கர் நிலத்தில் பெரிய பெரிய பாக்கு மரங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.

பாக்கு வகைகள் மற்றும் பயன்கள்

பாக்கில் ஒரு வகை மட்டும் இல்லாமல் மொத்தமாக நான்கு வகைகள் இருப்பதாகவும், அவை நாட்டு பாக்கு, மங்கலம் பாக்கு, முகித் பாக்கு வகை மற்றும் சுமங்கலம் பாக்கு வகை என கூறுகிறார்.

இந்த நான்கு பாக்கு வகைகளில் இவர் நாட்டு பாக்கு வகையை சாகுபடி செய்து வருவதாகவும் ஏனென்றால் நாட்டு பாக்கு வகையை மட்டுமே மக்கள் அதிக அளவில் விரும்பி வாங்குவதாகவும் இதன் காரணமாகவே இவர் நாட்டு பாக்கு வகையை சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

நாட்டு பாக்கு ஹைபிரிட் பாக்கு வகையை விட மிகவும் தரமானதாக இருக்கும் எனவும் இதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித நோய்களும் ஏற்படாது எனவும், உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும் எனவும் கூறுகிறார்.

பாக்கு பல வகைகளில் பயன்பட்டு வருவதாகவும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் பாக்கு முக்கியமாக இருக்கும் எனவும் பாக்கு இல்லாத எந்த நிகழ்ச்சிகளும் இல்லை எனவும் கூறுகிறார்.

சுபநிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பல பயன்பாடுகளுக்கு பாக்கு பயன்பட்டு வருவதாகவும், பாக்கு என்பது பழங்காலத்தில் இருந்து மக்கள் பயன்படுத்தி வரும் ஒரு பொருள் எனவும் இன்றுள்ள நிலையிலும்  அதிகளவு மக்கள் இந்த பாக்கை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

எனவே பாக்கு அதிகளவு பயன்களில் மக்களுக்குப் பயன்பட்டு வருவதாக கூறுகிறார்.

Watering system and fertilizer

பாக்கு சாகுபடி செய்வதற்கு தண்ணீரின் தேவை அதிகளவில் இல்லை எனவும் செடி வளரும் வரை மட்டும் நீரினை செடிகளுக்கு அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

செடி வளர்ந்த பிறகு அவற்றிற்கு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை மட்டும் நீரினை அளித்தால் போதுமானது எனக் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த பாக்கு மரங்களுக்கு இயற்கை உரமான மாட்டுச் சாணத்தை மட்டுமே அளித்து வளர்த்து வருவதாகவும் செயற்கை உரம் எதையும் இவர் பயன்படுத்துவதில்லை எனவும் கூறுகிறார்.

இயற்கை உரங்களை மரங்களுக்கு அளித்து வளர்த்தால் மரங்கள் சிறப்பாக வளரும் எனவும் கூறுகிறார்.

பராமரிப்பு முறை மற்றும் அறுவடை செய்யும் முறை

பாக்கு சாகுபடியில் அதிகளவு பராமரிப்பு இல்லை எனவும் கன்று வளர்ந்து செடியாகும் வரை மட்டும் பராமரித்தால் போதும் எனவும், செடி மரமாகி விட்டால் அதில் எந்தவித பராமரிப்பும் நமக்கு இல்லை எனவும் கூறுகிறார்.

பாக்கு நாற்று பெரிய மரமாக வளர்ந்து பாக்குகளை அறுவடை செய்வதற்கு ஐந்து வருடம் தேவைப்படும் எனவும், இந்த ஐந்து வருடத்தில் இவர் பாக்கு மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இந்த ஊடுபயிர்கள் மூலமும் இவருக்கு சிறந்த வருமானம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.

Sales method and profit

பாக்கு சாகுபடியை இவர் மிகச் சிறப்பான முறையில் செய்து பாக்கு நாற்று மற்றும் பாக்குகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இன்றுள்ள நிலையில் பாக்கு அதிக விலையில் விற்பனை ஆகி வருவதாகவும் இப்பொழுது இவர் பாக்கு சாகுபடி செய்து விற்பனை செய்து வருவதால் இதன் மூலம் இவர் லட்சங்களில் வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் பாக்கு சாகுபடியை மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான தீவனப்புல் உற்பத்தி.

Leave a Reply