இறால் மீன் வளர்ப்பில் லட்சங்களில் வருமானம்.

டாக்டர் மருது பாண்டியன் அவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை அருகிலுள்ள கட்டுமாவடியில் இறால் பண்ணையை வைத்து லட்சங்களில் வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இறால் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Dr. marudhu Pandian their life

டாக்டர் மருது பாண்டியன் அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கட்டுமாவடியில் இறால் பண்ணையை வைத்து அதன் மூலம் லட்சங்களில் வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

டாக்டர் மருது பாண்டியன் அவர்கள் இளங்கலை விலங்கியல் பட்டப்படிப்பினை பயின்று முடித்து விட்டு, முதுகலை தாவரவியல் பட்டப் படிப்பை பயின்று இருப்பதாகவும், இவற்றுடன் இவர் m Phil பட்டப் படிப்பினையும் பயின்றி இருப்பதாக கூறுகிறார்.

மேலும் டாக்டர் மருதுபாண்டியன் அவர்கள் இப்பொழுது இறால் மீன் வளர்க்கும் முறையை பற்றி தெரிந்து கொள்ள வரும் பண்ணையாளர்களுக்கு இறால் மீன் பற்றிய தகவல்களை எடுத்துக் கூறும் ஆலோசகராக இருந்து வருவதாகக் கூறுகிறார்.

இறால் மீன்களின் வளர்ப்பு

டாக்டர் மருது பாண்டியன் அவர்கள் மற்ற மீன் வகைகளை வளர்த்து அதனை விற்பனை செய்வதை விட, இந்த இறால் மீன்களை வளர்த்து விற்பனை செய்யும் போது அதிக அளவு லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.

மேலும் இவர் வளர்க்கக்கூடிய இறாலின் வகை வனாமி எனவும், மேலும் இந்த வகை இறால்கள் பசிபிக்கில் இருந்து வருவதாகவும், அங்கிருந்து இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து அதிக அளவு இறால்கள் கிடைப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்ற இறால்களின்  முட்டைகளை வாங்கி வந்து இவர் இந்த இறால் மீன்களை வளர்த்து அதனை விற்பனை செய்து லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த இறால் மீன் வளர்ப்பை உப்பு நீரில் வளர்த்தால் மட்டுமே அதிக அளவு வளர்ச்சியை பெரும் எனவும், நன்னீரில் இந்த இறால்களை வளர்க்கும் போது உப்பு நீரில் வளர்ப்பதை விட குறைந்த அளவே வளர்ச்சி இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இறால் மீன்களை வளர்க்கும் போது பெரிய ஏரி போன்ற அமைப்பை உருவாக்கிய பிறகே இறால் மீன்களை வளர்க்க வேண்டும் எனவும், இவ்வாறு பெரிய ஏரியை உருவாக்காமல் இறால் மீன் வளர்ப்பை தொடங்கினால் அதிக அளவில் நஷ்டங்களை ஏற்படும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இறால் மீன்களை வளர்க்கின்ற ஏரியில் இறால் மீன்களை மட்டுமே வளர்க்க வேண்டும் எனவும், மற்ற எந்த வகை மீன்களையும் இந்த இறால் மீன்களுடன் சேர்த்து வளர்க்கக் கூடாது எனவும் கூறுகிறார்.

Specialties of shrimp

டாக்டர் மருது பாண்டியன் அவர்கள் இறால் மீன்களை நாம் உணவாக உண்ணும் போது நமக்கு அதிகளவில் எந்த நோய்களும் வராது எனவும், இந்த இறால் மீன்களில் அதிக அளவு மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த இறால் மீன்கள் உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும் எனவும், இதனை உண்ணும் போது நமக்கு புரதச்சத்து அதிக அளவில் கிடைக்கும் எனவும் டாக்டர் மருது பாண்டியன் அவர்கள் கூறுகிறார்.

இறால் மீன்களின் மேலே உள்ள தோளில் இருந்து ஒரு மருந்தினை தயார் செய்வார்கள் எனவும், அந்த மருந்தினை இறைச்சி உண்பதற்கு பின் நாம் குடித்தால் நமக்கு கொழுப்புகள் அதிக அளவில் இருக்காது எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இறால் மீன்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள கூடாது எனவும், ஏனெனில் எந்த உணவுகளும் சரியான அளவு முறையில் எடுத்துக் கொண்டால் மட்டுமே உடலுக்கு நன்மை எனவும் கூறுகிறார்.

இதுபோன்று இறால் மீன்களில் அதிக அளவு நன்மைகள் இருப்பதாகவும், இந்த இறால் மீன்களை அதிக அளவு மக்கள் விரும்பி உண்பதாகவும் டாக்டர் மருது பாண்டியன் அவர்கள் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

டாக்டர் மருது பாண்டியன் அவர்கள் இந்த இறால் மீன்களை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து அவற்றை அதிக அளவில் விற்பனை செய்து வருவதாகவும், இந்த விற்பனையின் மூலம் இவருக்கு நிறைந்த லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

சைனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த இறால் மீன்களுக்கு அதிக அளவு வரவேற்பு இருந்து வருவதாகவும், இறால் மீன்களை ஏற்றுமதி செய்து அவர்கள் வாங்கி உண்பதாகவும் கூறுகிறார்.

டாக்டர் மருது பாண்டியன் அவர்கள் இவருடைய இறால் மீன்களை இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடு மற்றும் சைனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி முறையில் விற்பனை செய்து வருவதாகவும், இதில் அதிகளவு இறால் மீன்களை சைனா நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும் கூறுகிறார்.

எந்த ஒரு பண்ணை மற்றும் தொழில்களிலும் கிடைக்காத அதிக அளவு வருமானம் இந்த இறால் மீன்கள் மூலம் கிடைக்கும் எனவும்,இந்த இறால் மீன் விற்பனையில் லட்சங்களில் வருமானத்தை பெறமுடியும் எனவும் டாக்டர் மருதுபாண்டியன் அவர்கள் கூறுகிறார்.

எனவே இந்த இறால் மீன்கள் வளர்ப்பின் மூலம் லட்சங்களில் வருமானத்தை பெற்று நாம் சாதிக்க முடியும் எனவும், மேலும் இறால் மீன் வளர்ப்பை சரியான முறையில் வளர்த்தால் மட்டுமே லட்சங்களில் வருமானம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

The method of setting up the lake‌

இறால் மீன்களை வளர்ப்பதற்கு முன்பு ஏரியை அமைக்கும் முறையை மிகவும் கவனமான முறையில் சரியாக அமைக்க வேண்டும் எனவும், இவ்வாறு சரியான முறையில் அமைத்தால் மட்டுமே இறால் மீன்கள் நல்ல முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

இறால் மீன்களை வளர்ப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் முதலில் அந்த நிலத்தில் PH அளவு குறைவாக இருந்தால் அதில் சுண்ணாம்பு சேர்த்து அந்த நிலத்தை உழுது கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு உழுது வைத்த நிலத்தை ஒரு ஏரி போன்ற அமைப்பாக செய்து முடித்த பிறகு அந்த ஏரியில் வெவ்வேறு முறையில் வடிகட்டப்பட்ட நீரினை பாய்ச்ச வேண்டும் எனவும், இவ்வாறு விடப்பட்ட நீரில் காரத்தன்மை,உப்புத்தன்மை மற்றும் PH  அளவுகள் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த மூன்றிலும் ஏதாவது குறைவாக இருந்தால் அதனை அதிகப்படுத்த வேண்டும் எனவும், இதுவே அதிகமாக இருந்தால் அதனை குறைக்க வேண்டும் எனவும் டாக்டர் மருதுபாண்டியன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த இறால் மீன்கள் வளர்கின்ற நீரில் PH அளவு குறைவாக இருந்தாலும் இறால்கள் வளராது எனவும்,அதுவே அதிகமாக இருந்தாலும் இறால் மீன்கள் வளராது எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இறால் மீன்கள் வளர்கின்ற நீரில் PH அளவு 7.5 யில் இருந்து 8.5 என்ற அளவு முறை வரை இருந்தால் இறால் மீன்களின் வளர்ப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் என டாக்டர் மருதுபாண்டியன் அவர்கள் கூறுகிறார்.

எனவே நீரில் PH யின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை பார்த்த பிறகு இறால் மீன்களை அந்த நீரில் விட்டு வளர்க்க வேண்டும் என கூறுகிறார்.

டாக்டர் மருதுபாண்டியன் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இந்த இறால் மீன்களை வளர்த்து அதன் மூலம் லட்சங்களில் வருமானத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:எளிய வழிமுறையில் வீட்டுத்தோட்டம்.

Leave a Reply