பாலிலிருந்து நெய் எடுக்க பயன்படும் இயந்திரம்.

திரு ரிஷி அவர்கள் பாலில் இருந்து நெய் எடுக்க பயன்படும் இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய நிறுவனத்தில் உள்ள இந்த இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு ரிஷி அவர்களின் வாழ்க்கை

திரு ரிஷி அவர்கள் பாலில் இருந்து நெய் எடுக்க பயன்படும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி உள்ளார். இவர் இந்த இயந்திரத்தை மிகவும் சிறப்பான மற்றும் தரமான முறையில் உருவாக்கி உள்ளார்.

மேலும் திரு ரிஷி அவர்கள் இதுபோன்று விவசாயிகளுக்கு பயன்படும் இயந்திரங்களை அதிக அளவு தயாரித்து உள்ளதாகவும் கூறுகிறார்.இவருடைய நிறுவனத்தின் பெயர் கோவை கிளாசிக் இன்டஸ்ரிஸ் என கூறுகிறார்.

இந்த இயந்திரத்தின் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற முடியும் எனவும் கூறுகிறார். மேலும் இந்த இயந்திரம் ஆனது விவசாயிகளுக்கு அதிக அளவு பயன்படும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். மேலும் இந்த இயந்திரம் ஆனது மக்களிடையே அதிக அளவு வரவேற்ப்பை பெற்றுள்ளது எனவும் கூறுகிறார்.

திரு ரிஷி அவர்கள் இவருடைய இயந்திர நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களின் மூலம் அதிக வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார். மேலும் இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளது எனவும் கூறுகிறார்.

பாலில் இருந்து நெய் எடுக்கும் இயந்திரத்தின் தேவை

பொதுவாக பழங்காலத்தில் பாலில் இருந்து நெய் எடுப்பதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொள்வார்கள். இதனால் நேரம் ஆனது வீணாகின்றது. ஆனால் இந்த பாலில் இருந்து நெய் எடுக்க பயன்படும் இயந்திரத்தின் மூலம் மிக விரைவில் நெய்யை பிரித்தெடுக்க முடியும்.

இதனால் இந்த இயந்திரத்தை பயன்படுத்துவது மிகவும் சிறப்பான ஒரு வழிமுறை எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார். மேலும் இந்த இயந்திரத்தின் மூலம் நம்முடைய தேவைகள் ஆனது மிக விரைவில் தீர்ந்து விடும் எனவும் கூறுகிறார்.

மேலும் இயந்திரம் என்றாலே மிகவும் விரைவாக நம் தேவையை பூர்த்தி செய்யக் கூடியது எனவும், இதனால் நாம் அதிக அளவு கஷ்டங்கள் பட தேவையில்லை எனவும் கூறுகிறார். மேலும் இந்த இயந்திரத்தின் மூலம் நமக்கு அதிக அளவு நன்மையே கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

இன்றுள்ள காலத்தில் அனைத்து செயல்களும் மிக விரைவாக நடக்க வேண்டுமென மக்கள் எண்ணம் கொண்டுள்ளனர். அவர்களின் நேரத்தை எந்த அளவிற்கு மிச்சம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு மிச்சம் செய்ய வேண்டும் என எண்ணிக்ககொண்டு உள்ளனர். எனவே இந்த இயந்திரமானது மக்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் மிகவும் தேவை மற்றும் அவசியமான ஒன்றாக உள்ளது.

மதிப்பு கூட்டல் முறையில் சிறந்த லாபம்

திரு ரிஷி அவர்கள் இந்த இயந்திரத்தின் மூலம் அதிக லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

பொதுவாக பால் மற்றும் விவசாயம் தொடர்பான எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் விளைச்சல் செய்த பொருட்களை அப்படியே விற்பதை செய்யும் மதிப்பை விட அதனை மதிப்பு கூட்டல் செய்து விற்பனை செய்தால் அதனுடைய விலையும் லாபமும் அதிக அளவு கிடைக்கும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

திரு ரிஷி அவர்கள் இந்த பாலில் இருந்து நெய் எடுக்கும் இயந்திரத்தின் லாபத்தை ஒரு கணக்கீட்டு முறையில் கணக்கிட்டு வைத்துள்ளதாக கூறுகிறார். இந்தக் கணக்கீட்டு முறையில் இவர் பாலின் விற்பனை அளவை ஒரு லிட்டருக்கு ஒரு விலை என தோராயமாக கணக்கீட்டு வைத்துள்ளதாக கூறுகிறார்.

இது பகுதிக்குப் பகுதி மாறும் எனவும் கூறுகிறார். விவசாயி ஒருவர் ஒரு லிட்டர் பாலினை எந்த மதிப்பு கூட்டலும் செய்யாமல் 100×35 என்ற முறையில் 35 ஆயிரம் ரூபாய் அவருக்கு லாபம் கிடைக்கும் எனக் கூறுகிறார். இதனையே திரு ரிஷி அவர்களின் கணக்கீட்டு முறையில் கணக்கிட்டால் ஒரு லிட்டர் பாலில் இருந்து 6.15 லிட்டர் வெண்ணெய் கிடைப்பதாக கூறுகிறார்.

மேலும் வெண்ணையில் இருந்தே நாம் நெய் எடுப்பதால் இந்த 6.15 லிட்டர் வெண்ணையில் இருந்து 80 சதவீதம் அளவு நெய் கிடைப்பதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.இந்த 6.15 லிட்டர் வெண்ணைக்கு 80 சதவீதம் நெய் கிடைக்கும் என கணக்கில் எடுத்துக் கொண்டால் 5 கிலோ நெய் இவருக்கு கிடைப்பதாக கூறுகிறார்.

இப்பொழுது விவசாயி 100 லிட்டர் பாலை மதிப்புக்கூட்டல் செய்யாமல் அளித்தால் அவருக்கு 3500 ரூபாய் லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார். ஆனால் இதை மதிப்புக்கூட்டல் செய்யும் போது 5 கிலோ நெய் கிடைக்கும் எனவும், அதில் ஒரு கிலோ நெய் 2000 ரூபாய்க்கு விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

இதில் மீதி உள்ளதை தயிராக செய்து விற்பனை செய்யலாம் எனவும் கூறுகிறார். இந்த தயிர் விற்பனையில் 2500 ரூபாய் கிடைப்பதாக கூறுகிறார். மேலும் மீதி உள்ள 50 லிட்டர் பாலில் 75 சதவீதம் அளவு மோராக செய்து விற்பனை செய்யலாம் எனக் கூறுகிறார். இந்த மோர் விற்பனையிள் 3 ஆயிரம் ரூபாய் கிடைப்பதாகவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

எனவே இவ்வாறு மதிப்புக் கூட்டல் முறையில் ஒரு லிட்டர் பாலினை விற்பனை செய்தால் 7,500 ரூபாய் லாபம் கிடைப்பதாக கூறுகிறார். ஆனால் 100 லிட்டர் பாலினை மதிப்புக் கூட்டல் செய்யாமல் விற்பனை செய்தால் வெறும் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைக்கும் என கூறுகிறார். எனவே மதிப்புக்கூட்டல் செய்து பாலினை விற்பனை செய்வது மிகவும் சிறப்பான ஒரு செயல்முறை எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் பண்ணையாளர்கள் நாட்டுமாட்டு பாலை இவ்வாறு மதிப்பு கூட்டல் செய்து விற்பனை செய்தால் இதைவிட அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

இயந்திரத்தின் வகைகள்

திரு ரிஷி அவர்கள் இந்த பாலில் இருந்து நெய் எடுக்க பயன்படும் இயந்திரத்தை நான்கு வகைகளாக வைத்து உள்ளதாக கூறுகிறார். இதில் இவரிடம் வேகமாக இயங்கும் இயந்திரங்கள் இரண்டு உள்ளதாக கூறுகிறார். அந்த இயந்திரம் இரண்டும் 60 லிட்டர் இயந்திரம் என்றும் 125 லிட்டர் இயந்திரம் என்றும் அழைப்பதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இப்பொழுது இயந்திரம் என்று எடுத்துக் கொண்டாலே அது ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு அளவு பாலை நெய்யாக மாற்றுகிறது என்பதே அனைவருடைய எண்ணமும் ஆகும் என கூறுகிறார். இந்த 60 லிட்டர் இயந்திரத்திற்கு 60 லிட்டர் இயந்திரம் என பெயர் வைத்ததற்கு காரணம் இந்த இயந்திரமானது ஒரு மணி நேரத்திற்கு 60 லிட்டர் பாலை நெய்யாக மாற்றுவது எனக் கூறுகிறார்.

மேலும் இந்த 125 லிட்டர் இயந்திரத்திற்கு 125 லிட்டர் பெயர் வைத்ததற்கு காரணம் இந்த இயந்திரமானது ஒரு மணி நேரத்திற்கு 125 லிட்டர் பாலை நெய்யாக மாற்றுகிறது எனக் கூறுகிறார். இதற்கு அடுத்த நிலையில் இவரிடம் 365 லிட்டர் பாலையும், 550 லிட்டர் பாலையும் ஒரு மணி நேரத்தில் நெய்யாக மாற்றக்கூடிய இயந்திரம் இருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த இரண்டு அளவுகளில் உள்ள இயந்திரங்களும் பெரிய அளவில் பண்ணையை வைத்து நடத்தும் பண்ணையாளர்கள் வாங்குவதாக கூறுகிறார். சிறிய பண்ணையாளர்கள் 60 லிட்டர் இயந்திரத்தையும், 125 லிட்டர் இயந்திரத்தையும் வாங்கி செல்வதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த இரண்டு இயந்திரங்களில் உள்ள பாத்திரங்களை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற அளவுகளில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

இயந்திரம் செயல்படும் முறை

திரு ரிஷி அவர்கள் பெரிய அளவில் உள்ள இயந்திரத்தை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அதன் செயல் முறையை பற்றி விளக்கம் அளிப்பதாக கூறுகிறார். ஆனால் சிறிய அளவில் உள்ள இயந்திரத்தை வாங்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு அவ்வாறு எதுவும் கூற வேண்டிய அவசியமில்லை எனவும் கூறுகிறார்.

ஏனெனில் இந்த சிறிய இயந்திரங்களில் உள்ள பாத்திரத்தை மட்டும் எடுத்து வேலை செய்ய வேண்டியதாக இருக்கும். இதனால் இவை எளிதான முறையாக உள்ளதால் அதிக அளவு விளக்கம் வாடிக்கையாளருக்கு அளிப்பதில்லை என்றும் கூறுகிறார். இருந்தாலும் ஒரு தேவைக்காக செயல்படும் முறையை பற்றி வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்து வருவதாகவும் திரு ரவி அவர்கள் கூறுகிறார்.

இந்த இயந்திரத்தை மின்சாரம் வரும் பெட்டியிள் இணைத்ததற்கு பிறகு பாலினை எடுத்து பாத்திரத்தில் ஊற்ற வேண்டும் என கூறுகிறார். அதன் பிறகு நெய்யானது கிடைப்பதாகவும் கூறுகிறார். மேலும் இயந்திரத்தில் முதலில் ஊற்றிய பாலில் இருந்து நெய் எடுத்ததற்கு பிறகு மீண்டும் அதில் பால் ஊற்றி நெய் எடுக்கலாம் என கூறுகிறார்.

மேலும் பாலினை இயந்திரத்தில் ஊற்றும்போது குளிரூட்டாமல் இருக்கும் பாலினை ஊற்றுவது மிகவும் சிறப்பான ஒன்று என கூறுகிறார். மேலும் இந்த இயந்திரத்தில் உள்ள பாத்திரத்தின் நடுவில் ஒரு கம்பி இருக்கும் எனவும் அந்த கம்பியை கடிகாரத்தின் எதிர்திசையில் சுழற்ற வேண்டும் எனவும் கூறுகிறார்.

இயந்திரம் செயல்பட்டு ஐந்து நிமிடங்களுக்கு பிறகு நெய் கிடைக்கும் எனவும் கூறுகிறார். மேலும் மின்சாரம் இல்லாத போது இந்த இயந்திரத்தை நிறுத்தி வைத்துவிட வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் பாலில் தண்ணீர் கலந்து இருக்கக்கூடாது. ஏனெனில் பாலில் தண்ணீர் கலந்து இருந்தால் நெய்யின் தன்மையானது குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறுகிறார்.

இயந்திரத்தை பராமரிக்கும் முறை

திரு ரிஷி அவர்கள் இந்த இயந்திரத்தை பராமரிக்கும் முறையானது மிகவும் சுலபமான  முறை எனக் கூறுகிறார். இந்த இயந்திரம் காலையிலிரந்து மாலை வரை இயங்குகிறது என்றால் அதனை இரவில் சூடான நீரை வைத்து சுத்தம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்.

மேலும் இயந்திரத்தின் உள் ஒரு முக்கோண அமைப்பு போன்ற ஒரு அமைப்பு இருக்கும் எனவும் அதனை வெளியில் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார். மேலும் இந்த இயந்திரத்தை தொடர்ந்து செயல் படுத்திக் கொண்டே இருக்கக் கூடாது எனவும் கூறுகிறார். மற்றும் இந்த இயந்திரத்தை வீட்டிற்கு பயன்படுத்தும் மின்சாரம் மூலமும் இயக்கலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தில் ஒரு லிட்டர் நெய்க்கு ஒரு ரூபாய் மட்டுமே மின்சார செலவு எனக் கூறுகிறார். மேலும் இவர் இயந்திரங்களில் உள்ள பாகங்களை அகற்றுவதற்கும், இயந்திரத்தை இயக்குவதற்கும் சில பொருட்களை அளிப்பதாக கூறுகிறார்.

இவர் இந்த இயந்திரங்களை இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.மேலும் இந்த நெய்களை பன்னீர்களாக மாற்றி விற்பனை செய்யலாம் எனவும் கூறுகிறார். திரு ரிஷி அவர்கள் இந்த இயந்திரத்தின் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று மிகவும் சிறப்பான முறையில் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க:வாழையிலை விற்பனையில் சிறந்த லாபம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

One comment

Leave a Reply