சப்போட்டா பழம் சாகுபடியில் ஆண்டுக்கு ஒன்பது லட்சம் வருமானம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் திரு சத்தியமூர்த்தி என்னும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் சப்போட்டா பழம் சாகுபடி செய்து அதன் மூலம் ஆண்டுக்கு 9 லட்சம் வரை வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய சப்போட்டா பழம் சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Beginning of sapota fruit cultivation

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் திரு சத்தியமூர்த்தி என்னும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் சப்போட்டா பழம் சாகுபடி செய்து அதன் மூலம் ஆண்டுக்கு 9 லட்சம் வரை லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும் இவருடைய சிறு வயதிலிருந்து இவருக்கு விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் இருந்து வந்ததாக கூறுகிறார்.

மேலும் இவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்து உள்ளதாகவும் அதற்கு மேல் இவர் பள்ளி படிப்பை தொடங்கவில்லை என கூறுகிறார்.

இவருடைய குடும்பம் ஒரு விவசாய குடும்பம் எனவும் இவருக்கு அனைத்து வகை விவசாய முறையை பற்றி நன்கு தெரியும் எனவும் கூறுகிறார்.

இவருக்கு பழ வகைகளை சாகுபடி செய்வது மிகவும் பிடித்தமான ஒரு சாகுபடி முறை எனவும் இதன் காரணமாகவே இவர் சப்போட்டா பழம் சாகுபடியை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் இந்த சப்போட்டா பழம் சாகுபடியில் நிறைந்த வருமானம் கிடைக்கும் என்ற காரணத்தினால் இவர் சப்போட்டா பழம் சாகுபடியை தொடங்கி இப்பொழுது மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

சப்போட்டா நடவு செய்யும் முறை

திரு சத்தியமூர்த்தி அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் சப்போட்டா பழம் சாகுபடியை செய்து வருவதாகவும் இந்த சாகுபடி முறையை அனைவராலும் சிறப்பாக செய்ய முடியும் என கூறுகிறார்.

சப்போட்டா பழம் சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றை போட்டு நன்றாக பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

ஏனெனில் இவ்வாறு நிலத்தை நன்றாக இயற்கை உரங்களை அளித்து பராமரித்து வைத்துக் கொண்டால் தான் விளைச்சல் சிறப்பாக கிடைக்கும் என கூறுகிறார்.

சப்போட்டா பழம் சாகுபடியை இவர் கன்றுகளின் மூலம் செய்து வருவதாகவும், 20 அடிக்கு குழி தோண்டி அதில் கன்றுகளை நட வேண்டும் என கூறுகிறார்.

கன்றுகளை குழியில் நடும்போது அவற்றுடன் இயற்கை உரமான ஆட்டுப்புழுக்கையை சேர்த்து நட்டால் செடி ஆரோக்கியமாக வளரும் என கூறுகிறார்.

மேலும் கன்றுகளை நிலத்தில் நடும்போது ஒவ்வொரு கன்றுகளுக்கு இடையிலும் மூன்றில் இருந்து நான்கு அடி இடைவெளி விட்டு நட வேண்டும் என கூறுகிறார்.

இந்த முறையில் கன்றுகளை நிலத்தில் நட்டால் மிகவும் சிறப்பான முறையில் வளரும் என கூறுகிறார்.

Benefits of sapota fruit

சப்போட்டா பழத்தில் இயற்கையிலேயே பலவித சத்துக்கள் நிறைந்து இருப்பதாகவும் இந்த பழத்தை நாம் உண்பதால் நமக்கு மிக நன்மை எனக் கூறுகிறார்.

சப்போட்டா பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்து காணப்படுவதாக கூறுகிறார்.

மேலும் சப்போட்டா பழம் வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளதாகவும், அதிக அளவு வைட்டமின் ஏ இதில் நிறைந்து இருப்பதால் வயதான காலத்திலும் கண் பார்வை தெளிவாக தெரிவதற்கு இது உதவுவதாக கூறுகிறார்.

எனவே பார்வை நன்றாக கிடைப்பதற்கு சப்போட்டா பழத்தை பயன்படுத்தலாம் எனவும் வயதானவர்கள் இந்த சப்போட்டா பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம் என கூறுகிறார்.

மேலும் நன்றாக பழுக்காத சப்போட்டா பழங்களை நாம் உண்ணக்கூடாது எனவும், ஏனெனில் நன்றாக பழுக்காத சப்போட்டா பழங்களை நாம் உண்ணும் போது தொண்டையில் அரிப்பு உணர்வு மற்றும் சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என கூறுகிறார்.

உரம் மற்றும் பராமரிப்பு முறை

சப்போட்டா பழம் சாகுபடியில் இவர் இயற்கை உரங்களை மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வருவதாகவும் செயற்கை உரங்கள் எதையும் இவர் பயன்படுத்துவதில்லை எனக் கூறுகிறார்.

இயற்கை உரமான ஆட்டுப்புழுக்கை மற்றும் மாட்டு சாணம் இவற்றுடன் கோழிக்கழிவுகளை உரமாக அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவற்றுடன் இவர் வேப்பம் புண்ணாக்கு மற்றும் இழுப்பம் புண்ணாக்கு இவற்றுடன் கடலை புண்ணாக்கு ஆகியவற்றை உரமாக அளித்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு இயற்கை உரங்களை அதிகமாக செடிகளுக்கு அளித்து வளர்ந்து வந்தால் செடிகள் நன்று ஆரோக்கியத்துடன் வளரும் எனவும் எந்தவித நோய் தாக்குதலும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

மேலும் செடிகளுக்கு இதுவரையில் எந்தவித நோய் தாக்கதலும் அதிகமாக ஏற்பட்டது இல்லை எனவும், அவ்வாறு நோய் தாக்குதல் ஏதாவது ஏற்பட்டாலும் அதனை இவர் இயற்கை மருந்துகள் மூலம் சரி செய்து கொள்வதாக கூறுகிறார்.

மேலும் தோட்டத்தில் உள்ள களைச் செடிகளை சுத்தமாக நீக்கிவிட வேண்டும் எனவும், கலைச் செடிகள் இருந்தால் செடி விரைவில் வளராது எனக் கூறுகிறார்.

சப்போட்டா பழம் சாகுபடியில் அதிக அளவில் பராமரிப்பு எதுவும் இருக்காது எனவும், செடிகளுக்கு தேவையான அளவு நீர் மற்றும் உரம் அளித்தால் போதுமானது எனக் கூறுகிறார்.

மேலும் தோட்டத்தில் முளைக்கும் களைச்செடிகளை அவ்வப்போது நீக்கிவிட்டு செடிகளை பராமரித்து வந்தால் செடி விரைவில் மரமாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

Harvesting and Irrigation system

சப்போட்டா பழம் கன்றுகளை நடவு செய்த இரண்டாவது வருடத்தில் அறுவடைக்கு முற்றிலும் தயாராகி விடும் என கூறுகிறார்.

இரண்டு வருடம் இந்த சப்போட்டா பழ கன்றுகளை நன்கு பராமரித்தால் அதிக அளவில் விளைச்சல் இந்த இந்த சப்போட்டா பழ சாகுபடியில் கிடைக்கும் என கூறுகிறார்.

கன்று வளர்ந்து விளைச்சலை அளிக்கும் இந்த இரண்டு வருடத்திற்குள் சப்போட்டா பழம் கன்றுகளுக்கு இடையில் கொடி பயிர்களை வளர்த்து அதிலிருந்து லாபத்தை பெறலாம் என கூறுகிறார்.

சப்போட்டா பழம் மரங்களுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும், கன்றுகளுக்கு தேவைப்படும் நேரங்களில் நீரினை இவர் அளித்து வருவதாக கூறுகிறார்.

வாரத்தில் இரண்டு முறை மரங்களுக்கு நீரினை அளித்தால் போதுமானது எனவும் திரு சத்தியமூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

திரு சத்தியமூர்த்தி அவர்கள் வியாபாரிகளின் மூலம் இந்த சப்போட்டா பழத்தை விற்பனை செய்வதை விட நேரடியாக இவரே சந்தைகளில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

வியாபாரிகளின் மூலம் விற்பனை செய்வதை விட நேரடி முறையில் நாமே விற்பனை செய்யும் போது அதிலிருந்து நமக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.

மேலும் இயற்கையான முறையில் செயற்கை உரங்கள் எதையும் பயன்படுத்தாமல் இவர் சப்போட்டா பழம் சாகுபடி செய்து வருவதால் அதிக அளவில் இவருடைய சப்போட்டா பழம் விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.

இதன் மூலம் இவருக்கு ஆண்டுக்கு ஒன்பது லட்சம் வரை லாபம் கிடைத்து வருவதாகவும், இவருடைய சப்போட்டா பழம் சாகுபடியை இவர் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply