தரமான வாகை மரச்செக்கு உற்பத்தி.

கோயம்புத்தூரில் உள்ள கணபதி நகரில் திரு பாரதி அவர்கள் மிகத் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படும் வாகை மரச்செக்கு ஆலையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வாகை மரச்செக்கு உற்பத்தி நிறுவனத்தைப் பற்றியும் பின்வருமாறு காணலாம்.

திரு பாரதி அவர்களின் நிறுவனத்தின் தொடக்கம்

திரு பாரதி அவர்கள் கோயமுத்தூரில் உள்ள சித்தா தோட்டம், சங்கனூர் ரோடு, கணபதி நகரில் வசித்து வருவதாகவும், இவர் இங்கு சொந்தமாக வாகை மரச்செக்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறுகிறார்.

இவர் இவருடைய நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகை மரச்செக்குகளையும் மிகத் தரமான முறையில் உற்பத்தி செய்து அதனை மக்களுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.

இவருடைய நிறுவனத்தின் பெயர் தேவி இன்டஸ்ட்ரீஸ் எனவும், மற்றும் இந்த நிறுவனத்தை கடந்த 25 வருடங்களாக மிக சிறப்பான முறையில் நடத்தி  வருவதாகவும், கடந்த ஐந்து வருடங்களாக மட்டும் தான் மக்களுக்கு தேவைப்படுகின்ற மரச்செக்கு எண்ணெய் இயந்திரத்தை தயாரித்து வருவதாக கூறுகிறார்.

The specialty of the substitute Tree

வாகை மரம் ஆனது மற்ற மரங்களை விட மிகவும் சிறப்பான மரம் எனவும், இந்த மரத்திலிருந்து இயந்திரத்தை தயாரிக்கும் போது அது மிகவும் தரமானதாக இருக்கும் எனவும் திரு பாரதி அவர்கள் கூறுகிறார்.

வாகை மரத்தின் குணம் தன்னையே அர்ப்பணித்து அதனை மக்களுக்கு பயன்படும் வகையில் அளிக்கக் கூடிய தன்மையுடையது எனவும், இந்த மரம் மிகவும் பயனுள்ள மரம் எனவும் கூறுகிறார்.

அனைத்து மரங்களும் பகல் நேரங்களில் நம்மிடம் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு நமக்கு ஆக்சிஜனை அளிக்கும் எனவும்‍, ஆனால் இந்த வாகை மரம் மட்டுமே அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு அதிக ஆக்ஸிஜனை நமக்கு அளிக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் வாகை மரங்கள் அதிக அளவு மருத்துவ குணத்திற்கு பயன் பட்டு வருவதாகவும், இந்த வாவை மரத்தினால் தயாரிக்கப்பட்ட இயந்திரத்தில் நாம் எண்ணெய்யை உற்பத்தி செய்யும் போது அதிக அளவு மருத்துவ குணம் அந்த எண்ணெயில் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் அதிக அளவு மக்கள் இந்த வாகை மரத்தின் சிறப்பை அறிந்து, அந்த வாகை மரத்தினால் உருவாக்கப்பட்ட இந்த மரச்செக்கை வாங்கிச் செல்வதாகவும் திரு பாரதி அவர்கள் கூறுகிறார்.

வாகை மரத்தின் வகைகள்

வாகை மரங்களில் பல வகை வாகை மரங்கள் இருப்பதாகவும், உதாரணமாக தூம்பு வாகை, கல் வாகை, மல வாகை இது போன்று பல வகை வகை மரங்கள் இருப்பதாக திரு பாரதி அவர்கள் கூறுகிறார்.

அதில் தூம்பு வாகை மரங்களின் இலைகள் இரவு நேரங்களில் சுருங்கி விடும் எனவும், இந்த மரத்தின் வலிமை தன்மை மிகக் குறைவாக இருக்கும் எனவும், ஆனால் அனைத்து வகை வாகை மரங்களிலும் மருத்துவ குணங்கள் நிச்சயமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

ஆனால் இந்த தூம்பு வாகை மரங்கள் மூலம் இயந்திரத்தை தயாரிக்க முடியாது எனவும், ஏனெனில் இந்த வாகை மரத்தில் வலிமை மிகக் குறைவாக இருக்கும் எனவும், இதன் காரணமாக இந்த மரத்தில் மரச்செக்கை உற்பத்தி செய்தால் மரச்செக்கு தரமானதாக இருக்காது எனவும் கூறுகிறார்.

கல் வாகை மரம், மல வாகை மரம், கருப்பு வாகை மரம் மற்றும் வெள்ளை வாகை மரம் ஆகிய வாவை மரங்களை மரச்செக்கு உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், இதில் மரச்செக்கை உற்பத்தி செய்தால் மரச்செக்கு மிக தரமானதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

System of substitute wood check

திரு பாரதி அவர்களின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் அனைத்து மரச்செக்குகளையும் துருப்பிடிக்காத எஃகு மற்றும் வாகை மரத்தின் மூலம் தயாரித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த வாகை மரச்செக்கில் உள்ள உலக்கை வாகை மரத்தினால் உருவாக்கப்பட்டது எனவும், உரல் வாகை மரத்தினால் உருவாக்கப்பட்டது எனவும், மேலும் இந்த இயந்திரம் தானாகவே இயங்க கூடியது, இவ்வாறு இயந்திரம் தானாக இயங்க உதவியாக இருக்கும் பாகத்தினையும் வாவை மரத்தினால் தயாரித்து உள்ளதாக கூறுகிறார்.

மேலும் இந்த  இயந்திரத்தில் சில பாகங்களை துருப்பிடிக்காத எஃகின் மூலம் தயாரித்து உள்ளதாகவும், எங்கு எல்லாம் எண்ணெய் செல்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் இந்த துருப்பிடிக்காத எஃகினை பயன்படுத்தி இயந்திரத்தை உருவாக்கி உள்ளதாக திரு பாரதி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தில் உள்ள மோட்டார் மற்றும் கியர்பாக்ஸ் போன்ற அனைத்தும் இயந்திரத்திற்கு உள்ளேயே இருக்கும் எனவும் வெளியில் தெரியாது எனவும் கூறுகிறார்.

இவ்வாறு இவை அனைத்தும் இயந்திரத்திற்குள் இருப்பதால் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும், இந்த இயந்திரம் மிக பாதுகாப்பானது எனவும் திரு பாரதி அவர்கள் கூறுகிறார்.

இவரிடம் 15 கிலோவில் இருந்து 90 கிலோ வரை பயன்படுத்தக் கூடிய அளவில் இயந்திரங்கள் இருப்பதாகவும், மற்றும் இதில் 25 கிலோவை பயன்படுத்தக் கூடிய இயந்திரம் அனைவருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

பெரிய அளவில் தொழில் தொடங்குபவர்களுக்கும் சிறிய அளவில் தொழிலை வைத்து நடத்துபவர்களுக்கும் இந்த இயந்திரம் மிக பயனுள்ளதாக இருக்கும் என திரு பாரதி அவர்கள் கூறுகிறார்.

இயந்திரத்தை பயன்படுத்தும் முறை மற்றும் பராமரிக்கும் முறை

வாகை மரச்செக்கை இருபத்தி நான்கு மணி நேரமும் தொடர்ந்து உபயோகித்துக் கொள்ளலாம் எனவும், இதனால் எந்த பாதிப்பும் இயந்திரத்திற்கு ஏற்படாது எனவும் திரு பாரதி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தை பராமரிக்க கூடிய முறை மிகவும் சுலபமானது எனவும், இயந்திரத்தை தாங்கக் கூடிய தாங்கியில் தினமும் சிறிதளவு எண்ணெய் விடவேண்டும் எனவும் இவ்வாறு செய்தால் இயந்திரம் நன்றாக செயல்படும் எனவும் கூறுகிறார்.

இது மட்டுமே இந்த இயந்திரத்தை பராமரிக்கக் கூடிய செயல் முறை எனவும், இதற்கு என்று அதிக அளவு பராமரிப்புகள் தேவையில்லை எனவும் திரு பாரதி அவர்கள் கூறுகிறார்.

மேலும் உலக்கை மற்றும் ஊரல் தேயும் நிலையில் இருக்கும் போது அதனை நிச்சயமாக மாற்ற வேண்டும் எனவும், இவ்வாறு இந்த இரண்டையும் இவருடைய நிறுவனத்திலேயே மாற்றிக் கொள்ள முடியும் எனவும் கூறுகிறார்.

Sales method and price

திரு பாரதி அவர்கள் இவருடைய நிறுவனத்தில் உள்ள மரச்செக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்திற்கு மரச்செக்கை போக்குவரத்து முறையில் அனுப்பி வைப்பதாகவும், மேலும் மரச்செக்குக்கு தேவையான உபகரணங்களை கொரியர் முறையில் அனுப்புவதாகவும் கூறுகிறார்.

இவர் விற்பனை செய்து வருகின்ற இந்த மரச்செக்கு 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை இருப்பதாகவும், இவருடைய நிறுவனத்தில் தயாரிக்கப்படுகின்ற மரச்செக்குகள் மிகவும் தரமானதாக இருக்கும் எனவும் திரு பாரதி அவர்கள் கூறுகிறார்.

மேலும் வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் இருந்தால் கூட அவர்களுக்கு இந்த இயந்திரத்தை அனுப்பி வைப்பதாகவும், இவ்வாறு அனுப்பும் போது இந்த மரச்செக்கை முழுவதுமாக இணைத்த முறையிலேயே அனுப்புவதாகவும் கூறுகிறார்.

திரு பாரதி அவர்கள் மிகவும் சிறப்பான முறையில், தரமான மரச்செக்குகளை உற்பத்தி செய்து அதனை மக்களுக்கு அளித்து வருகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான தாய்லாந்து தேனீ பண்ணை.

Leave a Reply