கார்நேசன் மலர் சாகுபடியில் 20 லட்சம் வரை லாபம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வசித்து வரும் திரு மூர்த்தி என்னும் பட்டதாரி இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கார்நேசன் சாகுபடி செய்து அதன் மூலம் 20 லட்சம் வரை லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கார்நேசன் சாகுபடி முறையைப் பற்றி பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காரணம்.

கார்நேசன் மலர் சாகுபடியின் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வசித்து  வரும் திரு மூர்த்தி என்னும் பட்டதாரி இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கார்நேசன் மலர் சாகுபடி செய்து அதன் மூலம் 20 லட்சம் வரை லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் இவரது பட்டப்படிவினை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், இந்த வேலையில் இவருக்கு மாதம் 50,000 லாபம் கிடைத்து வந்ததாக கூறுகிறார்.

ஆனால் இவருக்கு இந்த தனியார் நிறுவனத்தின் வேலை கிடைக்கவில்லை எனவும், பிறரிடம் வேலை செய்யாமல் சொந்தமாக நாம் ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் இருந்து வந்ததாக கூறுகிறார்.

இதன் காரணமாக இவர் தனியார் நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்த கார்நேசன் மலர் சாகுபடியை தொடங்கி இப்பொழுது மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்து அதன் மூலம் 20 லட்சம் வரை லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

Carnation flower cultivation method

கார்நேசன் மலர் சாகுபடியை திரு மூர்த்தி அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

கார்நேசன் மலர் சாகுபடியை இவர் பாலி ஹவுஸ் முறையில் சாகுபடி செய்து வருவதாகவும் இந்த பாலி ஹவுஸில் சாகுபடி செய்தால் சிறப்பாக மலர்கள் விளைச்சல் ஆகும் என கூறுகிறார்.

கார்நேசன் மலர் சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றை போட்டு நிலத்தை நன்றாக உழுது பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை நன்றாக உழுது உரங்களை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொண்டால் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என கூறுகிறார்.

நிலத்தை நன்றாக உழுது பதப்படுத்தி வைத்த பிறகு நிலத்தை சுற்றிலும் பாலி ஹவுஸ் அமைக்க தொடங்கி விட வேண்டும் என கூறுகிறார்.

பாலி ஹவுஸ் அமைத்த பிறகு நிலத்தில் கார்நேசன் மலர் செடிகளைை நட தொடங்கி விட வேண்டும் எனவும்,15 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு ஒவ்வொரு நாற்றுகளையும் நட வேண்டும் எனவும் இந்த முறையில் நட்டால் செடி நன்றாக வளர்வதற்கு உதவியாக இருக்கும் என கூறுகிறார்.

நாற்றுகளின் மூலமே இவர் கார்நேசன் மலர் சாகுபடி செய்து வருவதாகவும் நாற்றுகளின் மூலம் வளர்த்தால் விரைவில் செடி வளர்ந்து விளைச்சல் அளிக்கும் என கூறுகிறார்.

25 சென்ட் பரப்பளவில் இவர் கார்நேசன் மலர் சாகுபடி செய்து வருவதாகவும், மீண்டும் 10 சென்ட் பரப்பளவில் இந்த மலர் சாகுபடி செய்ய இருப்பதாக கூறுகிறார்.

கொடைக்கானலில் இருக்கும் ஒரு கார்நேசன் மலர் சாகுபடி செய்யும் இடத்திலிருந்து இவர் கார்நேசன் மலர் நாற்றுக்களை வாங்கி சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

கார்நேசன் மலரின் பயன்கள்

திரு மூர்த்தி அவர்கள் கார்நேசன் மலரில் பலவித பயன்கள் இருப்பதாகவும்,இந்த மலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

கார்நேசன் மலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் இதனை திருமணத்தில் அதிகமாக பயன்படுத்துவார்கள் என கூறுகிறார்.

மேலும் விழாக்கள் செய்யும் இடங்களில் அலங்கரிப்பதற்கு இதனை அதிகமாக பயன்படுத்துவார்கள் எனவும் மற்றும் பூங்கொத்து தயாரிப்பதற்கும் இதனை அதிகமாக பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

பெரிய பெரிய உணவகங்களில் அலங்காரத்திற்காக இதனை அதிகமாக பயன்படுத்துவார்கள் எனவும், இந்தியா முழுவதும் இந்த கார்நேசன் மலருக்கு அதிக வரவேற்பு இருப்பதாக திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

ரோஜாக்கள் மற்றும் பிற மலர்களை விட இந்த கார்நேசன் மலர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாலும், இதனுடைய தோற்றமும் காண்பவர்களை ஈர்க்கும் அளவிற்கு இருப்பதாலும் அதிகளவு மக்கள் இந்த மலரையே விரும்பி வாங்குவதாக கூறுகிறார்.

டெல்லி,மும்பை மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் இந்த கார்நேசன் மலரை விரும்பி வாங்கி பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

கார்நேசன் மலரில் இரண்டு வகைகள் இருப்பதாகவும்,அவை ஸ்டாண்டர்ட் கார்நேசன் மலர் மற்றும் ஸ்பிரே கார்நேசன் மலர் என கூறுகிறார்.

இதில் இவர் ஸ்டாண்டர்ட் கார்நேசன் மலரினை சாகுபடி செய்து வருவதாகவும் இந்த மலர் நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

Fertilizer and maintenance method

கார்நேசன் மலர் சாகுபடி செய்வதற்கு இவர் செயற்கை உரங்கள் எதையும் அதிகமாக பயன்படுத்துவதில்லை எனவும் இயற்கை உரங்களை மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டு புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளையும் உரமாக பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

செடிகளுக்கு நோய் தாக்குதல் எதுவும் அதிகமாக ஏற்படாது எனவும் நோய் தாக்குதல் ஏற்பட்டால் இவர் இயற்கை மருந்துகளை அளித்து வருவதாகவும் சில சமயங்களில் மட்டுமே செயற்கை மருந்துகளை அளித்து வருவதாக கூறுகிறார்.

இந்த கார்நேசன் மலர் சாகுபடியில் அதிகளவில் பராமரிப்பு இருக்காது எனவும், குறைந்த அளவில் மட்டுமே பராமரிப்பு இருக்கும் என கூறுகிறார்.

செடிகளின் இடையில் இருக்கும் களை செடிகளை சுத்தம் செய்து விட வேண்டும் எனவும் ஏனெனில் கலைச் செடிகள் இருந்தால் கார்நேசன் மலர் செடியின் சத்துக்களை எடுத்துக் கொள்ளும் என கூறுகிறார்.

செடி சாயாமல் இருப்பதற்கு பின்னல் போன்ற அமைப்பில் ஒரு பந்தலை உருவாக்கி அதன் மீது செடி வளரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இந்த முறையை பின்பற்றினால் செடி நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

அறுவடை மற்றும் நீரினை அளிக்கும் முறை

கார்நேசன் நாற்றுகளை நட்ட ஐந்தாவது மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும் என திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும்,சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தினால் நீர் வீணாவது குறையும் எனக் கூறுகிறார்.

வாரத்திற்கு இரண்டிலிருந்து மூன்று முறை இந்த செடிகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் எனவும்,அறுவடைக்கு செடி தயாரானதும் அதனை அறுவடை செய்து விட வேண்டும் என கூறுகிறார்.

Sales method and profit

அறுவடைக்கு செடி தயாரானதும் பூக்களை அறுவடை செய்து அதனை  கோயமுத்தூர் மற்றும் பிற பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இந்த கார்நேசன் மலர் சாகுபடியில் இவர் 20 லட்சம் ரூபாய் வரை லாபத்தை பெற்று வருவதாகவும், இவருடைய தோட்டத்தில் விளையும் மலர்கள் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பதால் அதிகளவில் இது விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.

வாடிக்கையாளர்கள் இவருடைய தோட்டத்திற்கு வந்து மலர்களை வாங்கி செல்வதாகவும் மற்றும் இவர் ஏற்றுமதி மூலம் மலர்களை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் திரு மூர்த்தி அவர்கள் இவருடைய கார்நேசன் மலர் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் பல தகவல்கள்:பிராய்லர் கோழி வளர்ப்பில் மாதம் 60 ஆயிரம் வருமானம்.

Leave a Reply