வெண்பன்றி வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

திரு இளங்கோ அவர்கள் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் உள்ள ஈசிஆரில் ஒரு வெண் பன்றி பண்ணையினை வைத்து நடத்தி வருகிறார். அவரையும், அவர் பண்ணையையும்  பின்வருமாறு காணலாம்.

திரு இளங்கோ அவர்களின் வாழ்க்கை

திரு இளங்கோ அவர்கள் சென்னையி ல் இருந்து பாண்டிச்சேரி வழியில் உள்ள ஈசிஆரில் ஒரு சிறப்பான வெண்பன்றி பண்ணையினை நடத்திவருகிறார். அனைவரும் ஆடு, கோழி, மீன் போன்ற பண்ணைகளை வளர்த்து வருகின்றனர்.

ஆனால் யாரும் அதிக அளவில் செய்யாத ஒரு தொழிலை செய்யலாம் என்ற எண்ணம் கொண்டு திரு இளங்கோ வெண்பன்றி பண்ணையினை தொடங்கியதாக கூறுகிறார். திரு இளங்கோ வர்த்தக தொடர்பான தொழில் செய்பவர். மேலும் திரு இளங்கோ அவர்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு முதலில் ஆடு வளர்ப்பதை பற்றி ஆராய்ந்தார். அதன்பின் கோழி வளர்ப்பு பற்றியும் சென்று அறிந்து உள்ளார்.

மேலும் மீன் வளர்ப்பு பற்றியும் அவருடைய நண்பரின் மூலம் கேட்டு அறிந்துள்ளார். இதில் எந்த விலங்கு அதிகம் குட்டிகளை தரும் என்றால் பண்றீங்களே அதிகம் குட்டிகளை தருகிறது. அதனால் பன்றி வளர்ப்பு தொடங்கியதாக கூறுகிறார். திரு இளங்கோ அவர்கள் முதலில் பன்றி வளர்க்கும் போது சமுதாயத்தில் உள்ளவர்கள், திரு இளங்கோ அவர்களை இழிவாகவே பார்த்தனர். அதன்பின் அவர் வெண்பன்றி வளர்ப்பில் அதிக லாபம் அடைந்ததால் அவரை பெருமையாகவே அனைவரும் கூறுகின்றதாக திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

வெண்பன்றி வளர்ப்பு

பன்றிகள் என்றாலே இழிவாகவும், பன்றிகளால் நோய்கள் ஏற்படும் என்ற எண்ணத்தை மக்கள் கொண்டுள்ளதால்,இந்த வெண்பன்றி வளர்ப்பு பண்ணையை மக்கள் இருக்கும் இடத்திலிருந்து சிறிது தொலைவான இடத்தில் வைத்துள்ளதாக திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

இந்தப் பண்ணை திரு இளங்கோ அவர்களுக்கு சிறிது தொலைவாக இருந்தாலும், வெண்பன்றி வளர்ப்பை விரும்பி வளர்த்தி வருவதாக கூறுகிறார். இந்த வெண் பன்றி பண்ணையில் மொத்தமாக தாய் மற்றும் குட்டிகளை சேர்த்து அறுநூறு வெண் பன்றிகள் உள்ளதாக திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

பன்றிகளுக்கு வரும் நோயை தடுக்க அவைகள் பிறந்தவுடனே தடுப்பூசி போடுவதாக திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார். குழந்தைகளுக்கு  எவ்வாறு இருபது வகையான தடுப்பூசி போடப்படுகிறதோ அதேபோல் பன்றிகளுக்கும் ஒரு அட்டவணை உள்ளது. அதன்படி பன்றிகள் பிறந்து முதல் நாளில் இருந்து பத்தாம் நாள் ஒரு மாதம் என்று இடைவெளிவிட்டு பன்றிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த தடுப்பூசி வகைகள் தமிழ்நாட்டில் அதிக விலையாக உள்ளதாலும், இங்கு அதிகம் கிடைப்பதில்லை என்பதாலும், தடுப்பூசிகளை பெங்களூர், பஞ்சாப் போன்ற மாவட்டங்களில் இருந்து தடுப்பூசி வாங்கி செலுத்துவதாக கூறுகிறார். வெண் பன்றிகளின் இனப்பெருக்க காலம் இரண்டு அறுவடை காலம் என கூறுகிறார். இதனுடைய கற்பகாலமானது மூன்று மாதம், மூன்று வாரம், மூன்று நாள் ஆகும். அதன்பின் பால் அளிப்பது இரண்டு மாதம், அதற்குப்பின் ஒரு மாதம் இயல்பு நிலையில் இருக்கும். அதன்பின் மீண்டும் கர்ப்பம் அடையும். வருடத்திற்கு இரண்டு முறை இந்த வெண் பன்றிகள் குட்டி போடுகின்றன. ஒவ்வொரு முறையும் ஐந்திலிருந்து பத்து மற்றும் பண்ணிரண்டு குட்டிகளை போடும் தன்மையுடையது. பொதுவாக ஆடு, மாடுகள் குட்டி போடும் போது சில குட்டிகள் இறந்து பிறக்கின்றன. மனிதர்களைப்போல் விலங்குகளுக்கும் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பதால் அவ்வாறான இறப்பு விகிதம் குறையும் என திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

அவருடைய பண்ணையிலுள்ள பன்றிகள் இவ்வாறு இறப்பதில்லை எனவும் கூறுகிறார். பெண் பன்றிகளுக்கு நல்ல முறையில் உணவு அளிப்பதும் ஊட்டச்சத்து நிறைந்த தடுப்பூசிகளையும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் அளித்து வருவதால் அவைகள் மிகுந்த உடல் நலத்துடன் வளரும் எனவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார்.

பன்றிகளின் குணமே சண்டையிட்டுக் கொள்ளும் குணம் எனவும், அதனால் சில பன்றிகள் கர்ப்பமான பன்றிகளின் வயிற்றில் தாக்குவதால், அவைகளை தனித்தனி கூண்டுகளில் வைத்துள்ளதாக கூறுகிறார். பன்றிகளின் பலமானது அதனுடைய மூக்கிலேயே உள்ளது எனவும் கூறுகிறார்.

பண்ணையின் அமைப்பு

பொதுவாக பன்றி பண்ணைகள் என்றாலே மிகுந்த நாற்றம் அடிக்கும். ஆனால் திரு இளங்கோ அவர்களின் பண்ணையில் அவ்வாறாக எதுவும் இல்லை. பன்றிகளுக்கு ஆடு, மாடுகளுக்கு பண்ணை அமைக்கும் முறையில் பண்ணை அமைக்க முடியாது எனவும் கூறுகிறார். ஏனெனில் பன்றிகள் உடைய குணமானது தரையினை பறிக்கும் குணமுடையது எனவும் அவரின் பண்ணையிலேயே பன்றிகள் காங்கிரட் தரையினை கூட பறித்து விடுகின்றன எனவும் கூறுகிறார்.

அதன்பின் பைப் போன்ற அமைப்பிலும் அமைத்ததாகவும், அதிலும் சிறு குட்டிகள் அதனுள் நுழைந்து வெளியில் வந்ததாகவும் கூறுகிறார். இதனால் கூண்டினை தரமான கம்பிகளால் செய்துள்ளதாக கூறுகிறார். பன்றிகள் குளிப்பதற்காக கூண்டின் மேல் நீர் பைப்புகளை வைத்து அவைகளை குளிப்பாட்டுவதாகவும் கூறுகிறார்.

மேலும் பன்றிகள் என்றாலே ஈரத்துடனே இருக்கும் தன்மை உடையது. அவைகளுக்கு வியர்வை சுரப்பி இல்லாததாலும் அடிக்கடி அவைகளின் கூண்டிற்குள் நீரை விடுவதாகவும் கூறுகிறார். இந்த நீர்களை திரு இளங்கோ அவர்களின் மாமர தோட்டத்திற்கு விட்டு விடுவதாக கூறுகிறார்.பன்றிகளுக்கு உணவு அளிக்கும்போது உணவுகளை உண்டு கொண்டே தரையினை துளைக்கின்றதாகவும், அதனால் தரையினில் இரும்பு பைப்புகளை வைத்து அதன்மீது காங்கிரட் போன்ற அமைப்பை அமைத்து உள்ளதாகவும் கூறுகிறார். பன்றிகள் நீர் அருந்துவதற்கு கூண்டிற்கு உள்ளேயே குழாய்களை அமைத்து உள்ளார்.

பன்றிகள் தானாகவே குழாயில் இருந்து நீரை பருகி கொள்கின்றன. ஏனெனில் அவைகளுக்கு சிறு வயதில் இருந்தே திரு இளங்கோ அவர்கள் பயிற்சி அளித்து வந்ததாகவும் கூறுகிறார்.

பன்றிகளை குளிப்பாட்டும்போது குழாய்களின் வழியே காற்று உடன் சேர்ந்து நீரை விடுவதால், பன்றிகளும் நன்று சுத்தமாகவும், தரைகளும் சேர்ந்து சுத்தமாதாகவும் கூறுகிறார். பன்றிகள் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருப்பதே மிக முக்கியமானதாகும்.

ஏனெனில் அவைகளுக்கு வியர்வை சுரப்பி இல்லாத காரணத்தால், ஈரம் இல்லை என்றால் பன்றிகளுக்கு நோய் ஏற்பட்டு விடும் எனவும்  கூறுகிறார்.

பன்றிகளின் உணவு வகைகள்

பன்றிகளின் ஆரம்ப காலத்தில் அவைகளுக்கு உணவாக மக்காச்சோளம், அரிசி, கோதுமைத் தவிடு, அரிசித் தவிடு, புண்ணாக்கு, வைட்டமின் மாத்திரைகள் போன்றவற்றை அளிக்க வேண்டும் எனவும், இவைகளை முதல் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு பன்றிகளை இறைச்சிக்காக வளர்ப்பதா இல்லை குட்டிகளுக்காக வளர்ப்பதா என யோசித்து முடிவு எடுக்க வேண்டுமெனவும் கூறுகிறார். இறைச்சிக்காக வளர்க்கின்றோம் என்றால் கல்லூரிகள், பள்ளிகள், உணவகங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களிலிருந்து அதிகமான உணவுகளை அதாவது மீதமுள்ள உணவுகள் இல்லாமல் அவர்களின் தேவைக்குப் போக அதிகமாக உணவுகளை அளிக்கலாம் என கூறுகிறார். இதனால் பன்றிகள் நன்றாக வளரும் எனவும் கூறுகிறார்.

பன்றிகளுக்கு உணவு அளிப்பது ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாயும் மாதத்திற்கு பதிஏழாயிரம் ரூபாயும் செலவு ஆகும் எனவும் கூறுகிறார். எவ்வளவு தொலைவு சென்று உணவு எடுத்து வருகிறோமோ அந்த அளவிற்கு செலவு குறையும் என கூறுகிறார்.

பன்றிகளை வளர்த்துவது என்றால் இரண்டு மாத குட்டிகளாக வாங்கி வளர்த்துவதே சிறந்ததாகவும், குறைந்த அளவு நூறு குட்டிகளை வாங்கி வளர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார். கேரளாவிலேயே அதிக அளவு பன்றி இறைச்சிகளை விரும்புவதாக கூறுகிறார்.

பன்றிகளின் குட்டிகள்

பன்றிகளின் குட்டி ஆனது பிறக்கும்போது மூன்று அல்லது நான்கு கிலோ எடைகளை கொண்டிருப்பதாகவும், இதில் பன்றிகள் ஐந்து குட்டி ஈன்றால் ஐந்து அல்லது ஆறு கிலோ எடைகளை பெற்றிருப்பதாகவும் கூறுகிறார்.

பன்றிகளின் கர்ப்பப்பையின் அளவைப் பொருத்து குட்டிகளின் எடைகளை பிரித்து விடுவதாகவும் கூறுகிறார். குட்டிகள் வளரும்போது இரண்டு மாதத்தில் பதினைந்தில் இருந்து இருபது கிலோ எடைகளை அடைவதாகவும், அதன் பிறகு உணவகங்கள் போன்றவற்றில் கிடைக்கும் உணவுகளை அளித்தால் அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும் எனவும் பெருமளவு குட்டிகள் பிறந்ததிலிருந்து ஒரு எட்டு அல்லது ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நூறு கிலோ எடையை அடைவதாகவும் திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார். நூறு கிலோ எடைக்கு மேல் போனால் அதை முதிர்ந்த இறைச்சி என கூறுவதாக கூறுகிறார்.

பதினைந்து அல்லது இருபது கிலோ எடை உள்ள குட்டிகளே விற்பனைக்கு சிறந்த குட்டி எனவும் கூறுகிறார். கோழிகளில் பெண் கோழிகளின் இறைச்சியும், ஆடுகளில் ஆண் இறைச்சியும் சுவையாக இருப்பதைப் போல், பன்றிகளில் பெண் பன்றிகளின் இறைச்சியே சுவையாக இருப்பதாக திரு இளங்கோ அவர்கள் கூறுகிறார். பன்றிகளை மொத்த விற்பனைக்கு பதினைந்தாயிரம் ரூபாய்க்கு கொடுத்தால் அதை சந்தைப்படுத்தும் போது நாற்பத்து ஐந்தாயிரம் ரூபாய் வரையில் நிறைந்த வருமானம் கிடைப்பதாகவும் கூறுகிறார். தெருவில் திரியும் பன்றிகளை விட பண்ணையில் இருக்கும் பன்றிகள் தூய்மையாக இருப்பதால் விலை அதிகமாக இருப்பதாக கூறுகிறார்.

கேரளாவில் இருந்தே திரு இளங்கோ அவர்களின் பண்ணையில் இருந்து அதிக பன்றிகள் விற்பனை ஆவதாக கூறுகிறார். பன்றி இறைச்சி மிக நல்ல இறைச்சி எனவும், பன்றி இறைச்சிளே ஐம்பத்தி ஆறு சதவீதம் அளவில் உலகம் முழுவதும் விற்பனை ஆவதாக கூறுகிறார். தமிழ்நாட்டில் மட்டுமே பன்றி இறைச்சிகளை இழிவாக பார்க்கின்றனர். கேரளா மற்றும் பெங்களூரில் அதிக அளவு பன்றிகளின் இறைச்சிக்கு வரவேற்பு உள்ளதாகவும் கூறுகிறார்.

பன்றிகளின் இறைச்சிக்கு அதிக அளவு வரவேற்பு உள்ளதாகவும் இதன் மூலம் அதிக வருமானத்தை திரு இளங்கோ அவர்கள் பெற்றிருப்பதாகவும், பெற்று வருவதாகவும் கூறுகிறார். பன்றிகளை வளர்ப்பதால் அதன்மூலம் அபரிதமான வருமானம் கிடைப்பதாகவும் இதனால் தான் நிறைந்த வருமானத்தை பெறுவதாகவும் கூறுகிறார்.

இறைச்சிக்காக பெண் பன்றிகளை அதிக அளவு வளர்த்தும் எண்ணம் உள்ளதாகவும் மேலும் உணவுகளை வைப்பதற்கு தொட்டிகளை தனித்தனியாக வைத்துள்ளதாகவும் கூறுகிறார். பன்றி வளர்ப்பில் இருபத்து நான்கு மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கவேண்டுமென கூறுகிறார்.

திரு இளங்கோ அவர்கள் மேலும் வாத்துகளுக்கான ஒரு பண்ணையையும் அமைத்து உள்ளார். வாத்துக்களுக்கு அதிக உணவு மற்றும் அதிக நீர் மற்றும் நீர் நிலைகள் உள்ள இடத்தில் வாத்துக்களை வளர்த்தால் அவை நன்றாக வளரும் என கூறுகிறார். வாத்து வளர்ப்பிலும் அதிக வருமானம் வருவதாக கூறுகிறார்.

திரு இளங்கோ அவர்களின் அபரிதமான வருமானம்

திரு இளங்கோ அவர்கள் பன்றி வளர்ப்பின் முறையின் மூலம் மிக அதிக அபரிதமான வருமானத்தை பெறுவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:வீட்டிற்குள் ஒரு சிறப்பான பூங்கா.

 

Leave a Reply