கம்பு சாகுபடியில் நிறைந்த லாபம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கம்பு சாகுபடி செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கம்பு சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Beginning of rye cultivation

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கம்பு சாகுபடி செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய குடும்பம் காலம் காலமாக விவசாயத்தை செய்து வந்ததாகவும், கம்பு சாகுபடியை இவருடைய குடும்பம் மிகவும் சிறப்பான முறையில் செய்து வந்ததாகவும் கூறுகிறார்.

இதன் காரணமாகவே இவரும் கம்பு சாகுபடியை தொடங்கி இப்பொழுது மிக சிறப்பான முறையில் சாகுபடி செய்து வருவதாகவும், இது இவருக்கு மிகவும் பயனுள்ள முறையில் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இவருக்கு சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்து வந்ததாகவும், இவருடைய சிறுவயதில் இருந்தே இவர் விவசாயம் செய்வதை பார்த்து வளர்ந்ததாகவும் கூறுகிறார்.

இதனால் இவருக்கு விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் இருந்து வந்ததாகவும் விவசாயத்தைப் பற்றி இவருக்கு மிகவும் நன்றாகத் தெரியும் எனவும் கூறுகிறார்.

இதன் காரணமாக இவர் விவசாயத்தை தொடங்கி இப்பொழுது மிக சிறப்பான முறையில் விவசாயம் செய்து வருவதாகக் கூறுகிறார்.

கம்பின் பயன்கள்

இயற்கையான முறையில் விவசாயம் செய்யும் கம்பினை நாம் உண்ணும் போது அது நமக்கு பலவித நன்மைகளை அளிக்கும் எனவும் இந்த கம்பில் பல பயன்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.

வாரத்திற்கு ஒரு முறை கம்பினை நமது உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் நமது உடல்நிலை மிகவும் நல்ல முறையில் இருக்கும் எனவும் கூறுகிறார்.

கம்பினை பயன்படுத்தி கம்பு தோசை மற்றும் கம்பு பணியாரம் மேலும் கம்மங்கூழ் ஆகியவற்றை உருவாக்க முடியும் எனவும் இதனை நாம் உணவாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

கம்பு நார்ச்சத்து நிறைந்த உணவு எனவும் இதில் கொழுப்பு குறைவாக இருக்கும் எனவும், கம்மங்கூழை குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையை குறைக்கும் எனவும் கூறுகிறார்.

உடல் எடை குறைய வேண்டும் எனில் தினசரி ஒரு வேளை கம்மங்கூழை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை விரைவில் குறைந்து விடும் என கூறுகிறார்.

மேலும் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே கம்பு உணவை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுவலி மற்றும் வயிற்று வீக்கம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.

எனவே ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் கம்பு உணவை எடுத்து வந்தால் உடல் நிலை சிறப்பாக இருக்கும் எனக் கூறுகிறார்.

Method of cultivation of rye

கம்பு சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் இயற்கை உரங்களை அளித்து இயற்கை முறையில் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

கம்பு சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை நன்றாக பதப்படுத்தி வைத்த பிறகு அதில் கம்பு நாற்றுகளை நட்டு சாகுபடி செய்ய தொடங்கிவிடலாம் என கூறுகிறார்.

முதலில் கம்புகளை ஒரு நிலத்தில் விதைத்து அவை நாற்றுகளாக வளரும் வரை வளர்க்க வேண்டும் எனவும், கம்பு நாற்றுகளாக வளர்ந்தவுடன் அவற்றை எடுத்து பதப்படுத்தி வைத்துள்ள நிலத்தில் நட்டு வளர்க்க வேண்டும் என கூறுகிறார்.

ஒவ்வொரு நாற்றுகளுக்கு இடையிலும் முக்கால் அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும், ஒரு நாற்றினை நட்டால் அது வளரும் போது நான்கு நாற்றுகளாக வளர்ந்து விடும் எனவும் கூறுகிறார்.

ஒரு நாற்றில் இருந்து 4 கம்பு கருதுகள் கிடைக்கும் எனவும், இந்த கம்பு சாகுபடியின் மூலம் நமக்கு சிறந்த லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

விதைகளை நாற்றுகளாக உருவாகுவதற்கு முன்பு அந்த கம்பை ஜீவாமிர்தக் கரைசலுடன் கலந்து ஒரு துணியில் கட்டி வைக்க வேண்டும் எனவும், கம்பு ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும் போது அதனை நாற்றுகள் உருவாக்குவதற்கு பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார்.

உரம் மற்றும் பராமரிப்பு முறை

கம்பு சாகுபடி செய்வதற்கு இவர் முற்றிலும் இயற்கை உரங்களை மட்டுமே அளித்து வருவதாகவும் இயற்கை வழிமுறையில் கம்பு சாகுபடியை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

செடிகளுக்கு உரமாக இவர் ஆட்டுப் புழுக்கை மற்றும் மாட்டு சாணம் இவற்றுடன் கோழி கழிவுகளை அளித்து வருவதாகவும் இதனை செடிகளுக்கு அளிப்பதால் செடிகள் சிறப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

இந்த உரங்கள் அனைத்தையும் இவருடைய கால்நடை பண்ணையில் இருந்து இவர் எடுத்துக் கொள்வதாகவும் மற்றும் செடிகளுக்கு இவர் ஜீவாமிர்தம் மற்றும் பஞ்சகாவியா ஆகிய இயற்கை உரங்களையும் அளித்து வருவதாக கூறுகிறார்.

கம்பு சாகுபடியில் அதிக அளவில் பராமரிப்பு தேவையில்லை எனவும் செடிகளுக்கு நீரினை மட்டும் அளித்தால் போதுமானது எனவும் இந்த கம்பு சாகுபடியில் அதிகமான நோய் தாக்குதல் எதுவும் இருக்காது எனவும் கூறுகிறார்.

இந்த முறையில் பராமரித்து கம்பு சாகுபடி செய்தால் சிறப்பாக விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார்.

Harvesting and watering system

கம்பு சாகுபடியில் அதிக அளவில் நீர் செலவாகாது எனவும் குறைந்த அளவில் செடிகளுக்கு நீரினை அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

மற்றும் நாற்றுகளை நட்ட பிறகு முதலில் நீரினை விடும் போது அதில் ஜீவாமிர்தத்தை கலந்து செடிகளுக்கு அளிக்கலாம் எனவும், செடி நன்றாக வளர்ந்த பிறகு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் நீரினை அளித்தால் போதுமானது எனக் கூறுகிறார்.

செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும், இந்த சொட்டு நீர் பாசனத்தில் நீரினை அளித்தால் நீர் குறைந்த அளவில் செலவாகும் எனக் கூறுகிறார்.

கம்பு நாற்றுகளை நட்ட எழுபத்து ஐந்தாவது நாளிலிருந்து எண்பத்தி ஐந்தாவது நாளுக்குள் அறுவடைக்கு வந்து விடும் எனவும், அறுவடைக்கு வந்ததும் இதனை இவர் அறுவடை செய்து விடுவதாக கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

கம்பு சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து அதனை அறுவடை செய்து இவருடைய பண்ணைக்கு கம்பினை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவரிடம் குறைந்த அளவில் கம்பினை கேட்கும் வாடிக்கையாளர்களுக்கும் இவர் கம்பினை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இயற்கை முறையில் கம்பு சாகுபடி செய்து வருவதால் இவரிடம் அதிக அளவு வாடிக்கையாளர்கள் கம்பினை வாங்கி செல்வதாகவும், இதன் மூலம் இவர் நிறைந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய கம்பு சாகுபடியை மிக சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:முள்ளங்கி சாகுபடியில் சிறந்த வருமானம்.

One comment

Leave a Reply