இளநீர் வெட்ட பயன்படும் இயந்திரம்.

திரு ரிஷி அவர்கள் கோயமுத்தூரில் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இவர் இந்த நிறுவனத்தில் இளநீர் வெட்ட பயன்படும் ஒரு இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இவரைப் பற்றியும், இவருடைய இளநீர் வெட்ட பயன்படும் கருவியை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திரு ரிஷி அவர்களின் இயந்திர நிறுவனம்

திரு ரிஷி அவர்கள் கோயமுத்தூரில் வசித்து வருவதாகவும், இவர் இங்கு விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை வைத்து நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய நிறுவனத்தில் இளநீர் வெட்ட பயன்படும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி உள்ளதாகவும், இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விற்பனையாகி வருவதாகவும் கூறுகிறார்.

திரு ரிஷி அவர்கள் இந்த இயந்திர நிறுவனத்தை தொடங்கியதற்கு காரணம் இவருடைய சிறுவயதில் இருந்தே  விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இயந்திரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு இருந்ததே காரணம் என கூறுகிறார்.

எனவே இதனை அடிப்படையாக வைத்து திரு ரிஷி அவர்கள் இந்த இயந்திர நிறுவனத்தை தொடங்கி அதிகளவு விவசாயிகளுக்கு பயன்படும் இயந்திரங்களை உருவாக்கி அவற்றை மிக சிறப்பான முறையில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

Tender coconut cutting machine

திரு ரிஷி அவர்கள் இவருடைய இயந்திர நிறுவனத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும், இவர் இவருடைய இயந்திர நிறுவனத்தில் உருவாக்கியுள்ள அனைத்து வகை இயந்திரங்களையும் மிகவும் தரமான முறையில் உருவாக்கி உள்ளதாகவும் கூறுகிறார்.

ஏனெனில் இவருடைய இயந்திர நிறுவனத்தில் இயந்திரத்தை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் நல்ல மன நிம்மதியை பெறவேண்டும் என்ற காரணத்திற்காகவும், நல்ல தரத்துடன் இயந்திரம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் மிகச் சிறப்பான முறையில் இயந்திரத்தை உருவாக்கி வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த இளநீர் வெட்ட பயன்படும் இயந்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் உருவாகியுள்ளதாகவும், இதனுடைய தேவை மக்களிடையே அதிக அளவில் இருந்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த இளநீர் வெட்ட பயன்படும் இயந்திரம் மக்களுக்கு அதிக அளவில் பயன்படும் வகையில் இருப்பதாகவும், மகளிர் மற்றும் வயதில் மூத்தவர்களுக்கு இந்த இயந்திரம் அதிக அளவில் பயன்படும் எனவும் கூறுகிறார்.

ஏனெனில் கைகளால் இளநீரை வெட்டுபவர்கள் கைகளை வெட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும், ஆனால்  இந்த இளநீரை வெட்ட பயன்படும் கருவியினால் இளநீரை வெட்டும் போது அவ்வாறு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

இதனால் இந்த இளநீர் வெட்ட பயன்படும் இயந்திரம் மக்களுக்கு அதிக அளவில் பயன்படும் எனவும், மிகக் குறைந்த விலையிலேயே இவர் இதை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இன்றுள்ள நிலையில் ரசாயனம் கலந்த குளிர்பானங்களுக்கு பதிலாக இந்த இளநீர்கள் அதிக அளவில் விற்பனையாகி வருவதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இயந்திரத்தின் தேவை மற்றும் பயன்

மக்கள் அனைவரும் அதிக அளவில் பழங்கால முறையில் இளநீரை கைகளால் வெட்டி வருவதாகவும், இதனால் அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்த இளநீர் வெட்டும் கருவி பயன்படுத்தினால் அந்த வகையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

மேலும் இன்றுள்ள நிலையில் அதிக அளவில் இளநீர்கள் விற்பனையாகி வருவதாகவும், மக்களிடையே இந்த இளநீரின் முக்கியத்துவம் அதிக அளவில் வந்துவிட்டது எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இன்றுள்ள நிலையில் அதிக அளவில் இளநீர் கடைகளை மக்கள் தொடங்கி விட்டதாகவும், இவ்வாறு அதிக அளவில் இளநீர் கடைகளை தொடங்கியதால் இளநீர்களை வெட்ட தெரியாதவர்களுக்கு இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தை மகளீர்கள் சுலபமாக பயன்படுத்தலாம் எனவும், இந்த இயந்திரம் மிகவும் சுலபமான முறையில் செயல்படும் எனவும், அனைவராலும் இந்த இயந்திரத்தை மிக சுலபமான முறையில் இயக்க முடியும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இந்த வகையில் இந்த இயந்திரம் மிகவும் சிறப்பான முறையில் மக்களுக்கு பயன்பட்டு வருவதாக கூறுகிறார்.

How to use the machine

திரு ரிஷி அவர்கள் இந்த இளநீர் வெட்ட பயன்படும் இயந்திரத்தை மிகவும் சுலபமான முறையில் பயன்படுத்தலாம் எனவும், இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

இந்த இளநீர் வெட்ட பயன்படும் இயந்திரத்தில் இளநீரை வைத்து ஒரு கையை பயன்படுத்தியே இளநீரை வெட்டி விடலாம் எனவும்,  இளநீரை வெட்டியதற்கு பிறகு இளநீரில் உள்ள நீரை அருந்திய பிறகு இளநீரை இரண்டாக மிக சுலபமாக வெட்டி விடலாம் என கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தில் இளநீரை வெட்டும் போது எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும், மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை இந்த இயந்திரத்தில் உருவாகியுள்ளதாகவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தில் இளநீரை வெட்டும்போது இயந்திரம் அதிர்வதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும், மேலும் இளநீர் வெட்டும் போது இயந்திரத்தின் மீது ஒரு காலை வைத்து வெட்டினால் மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்கும் என கூறுகிறார்.

மேலும் இந்த இளநீர் வெட்ட பயன்படும் இயந்திரத்தில் உள்ள கத்தி ஆனது துருப்பிடிக்காத எஃகினால் உருவாக்கப்பட்டது எனவும், இதனால் இந்த எந்திரம் மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்கும் எனவும் கூறுகிறார்.

அதிகளவு வாடிக்கையாளர்கள் முழு இயந்திரத்தையும் துருபிடிக்காத எஃக்கினால் உருவாக்கி வேண்டும் என கேட்பதாகவும், இதனால் இவர் இவ்வாறு கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு முழு இயந்திரத்தையும் துருப்பிடிக்காத எஃகினால் உருவாக்கி தருவதாக கூறுகிறார்.

இயந்திரத்தின் பாதுகாப்பு முறை

இந்த இளநீர் வெட்டும் இயந்திரத்தில் எந்த அளவிற்கு அதிக அளவு இளநீரை வெட்டுகிறோமோ, அந்த அளவிற்கு அதிகளவு நாட்களுக்கு பிறகே இந்த இயந்திரத்தின் கத்தியை கூர்மை செய்து கொள்ளலாம் என கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தில் இளநீரை வெட்டிய இளநீரின் கழிவுகளை போட்டு வைப்பதற்கு ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும், மேலும் இந்த இயந்திரம் பெரிய அளவில் இருப்பதால் குழந்தைகள் இந்த இயந்திரத்தை தொடும் போது கைகளை வெட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு இயந்திரத்தின் கத்தியை ஒரு அமைப்பில் பொருத்தும் வகையில் உருவாக்கி உள்ளதாக கூறுகிறார்.

மேலும் திரு ரிஷி அவர்கள் தென்னை மரம் ஏறுவதற்கு பயன்படும் ஒரு இயந்திரத்தையும் உருவாக்கி உள்ளதாகவும், அதில் இரண்டு வகைகளை உருவாக்கி உள்ளதாகவும், ஒன்று விலை அதிகமாக உள்ள இயந்திரம் மற்றும் மற்றொன்று விலை குறைவாக உள்ள இயந்திரம் என கூறுகிறார்.

விலை அதிகமாக இருக்கும் இயந்திரம் தென்னை மரத்தில் ஏறும் போது மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்கும் எனவும், எவ்வளவு உயரத்தில் ஏறினாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த தென்னை மரம் ஏறும் இயந்திரத்தைப் பயன்படுத்தும் முறைகளை இயந்திரத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூறி விடுவதாகவும், இந்த இயந்திரத்தை போக்குவரத்து முறையில் அனுப்புவதாகவும் கூறுகிறார்.

திரு ரிஷி அவர்கள் மிகவும் சிறப்பான மற்றும் தரமான முறையில் இந்த இளநீர் வெட்டும் இயந்திரத்தை உருவாக்கி விற்பனை செய்து அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:பால் விற்பனையில் இளம் பண்ணையாளரின் புதிய முயற்சி.

Leave a Reply